102. திருநாரையூர் - பழம்பஞ்சுரம்
 
3890. காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான்-நலம்
                                                               தாங்கு
தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய,
பூம் புனல் சேர், புரி புன்சடையான்; புலியின்(ன்)
                                                       உரி-தோல்மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே.     1
உரை
   
3891. தீவினை ஆயின தீர்க்க நின்றான்-திரு நாரையூர் மேயான்;
பூவினை மேவு சடைமுடியான், புடை சூழப் பலபூதம்,
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான், அடங்கார்
                                                        மதில் மூன்றும்
ஏவினை எய்து அழித்தான், கழலே பரவா எழுவோமே.
                                                                         2
உரை
   
3892. மாயவன், சேயவன், வெள்ளியவன், விடம் சேரும்
                                                         மைமிடற்றன்
ஆயவன், ஆகி ஒர் அந்தரமும்(ம்) அவன் என்று, வரை
                                                             ஆகம்
தீ அவன், நீர் அவன், பூமி அவன், திரு நாரையூர்
                                                           தன்னில்
மேயவனைத் தொழுவார் அவர் மேல் வினை ஆயின
                                                       வீடுமே.      3
உரை
   
3893. துஞ்சு இருள் ஆடுவர்; தூ முறுவல் துளங்கும் உடம்பினராய்,
அம் சுடர் ஆர் எரி ஆடுவர்; ஆர் அழல் ஆர் விழிக்கண்,
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர்; நலன் ஓங்கு
                                                            நாரையூர்
எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை, ஏதமே.
                                                                           4
உரை
   
3894. பொங்கு இளங் கொன்றையினார், கடலில் விடம் உண்டு
                                                    இமையோர்கள்
தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர், சடைமேல் ஓர்
திங்களை வைத்து அனல் ஆடலினார், திரு நாரையூர் மேய
வெங்கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே.
                                                                         5
உரை
   
3895. பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி,
                                              பைங்கொன்றைத்-
தார் உறு மார்பு உடையான், மலையின் தலைவன்,
                                                       மலைமகளைச்
சீர் உறும் மா மறுகின் சிறைவண்டு அறையும் திரு நாரை-
யூர் உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று
                                                      ஒவ்வாவே.      6
உரை
   
3896. கள்ளி இடுதலை ஏந்து கையர், கரிகாடர், கண் நுதலார்
வெள்ளிய கோவண ஆடை தன்மேல் மிளிர் ஆடு அரவு
                                                             ஆர்த்து,
நள் இருள் நட்டம் அது ஆடுவர், நன்நலன் ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்தில், எம்மேல் வரு வல்வினை ஆயின
                                                        ஓடுமே.      7
உரை
   
3897. நாமம் எனைப்பலவும்(ம்) உடையான், நலன் ஓங்கு நாரையூர்
தாம் ஒம்மெனப் பறை, யாழ், குழல், தாள் ஆர் கழல், பயில,
ஈம விளக்கு எரி சூழ், சுடலை இயம்பும்(ம்) இடுகாட்டில்,
சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே.
                                                                       8
உரை
   
3898. ஊன் உடை வெண்தலை கொண்டு உழல்வான்,
                                   ஒளிர்புன்சடைமேல் ஓர்
வான் இடை வெண்மதி வைத்து உகந்தான், வரிவண்டு
                                                      யாழ்முரலத்
தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு
                                                   நாரையூர் மேய
ஆன் இடை ஐந்து உகந்தான், அடியே பரவா,
                                        அடைவோமே.      9
உரை
   
3899. தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார், உடம்பினில்
                                                                 உள்
மாசு புனைந்து உடை நீத்தவர்கள், மயல் நீர்மை கேளாதே,
தேசு உடையீர்கள்! தெளிந்து அடைமின், திரு நாரையூர்
                                                            தன்னில்
பூசு பொடித் தலைவர் அடியார் அடியே பொருத்தமே!
                                            10
உரை
   
3900. தண்மதி தாழ் பொழில் சூழ் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,
ஒண்மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர் தன்மேல்,
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார், வினை
                                                               போகி,
மண் மதியாது போய், வான் புகுவர், வானோர்
                                         எதிர்கொளவே.      11
உரை