தொடக்கம் |
106. திருவலஞ்சுழி - பழம்பஞ்சுரம்
|
|
|
3934. |
“பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும்
திரைக்
கங்கை
வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன், விடை ஏறும்
வள்ளல் வலஞ்சுழிவாணன்” என்று மருவி நினைந்து ஏத்தி,
உள்ளம் உருக, உணருமின்கள்! உறு நோய் அடையாவே.
1 |
|
உரை
|
|
|
|
|
3935. |
கார் அணி வெள்ளை மதியம் சூடி, கமழ் புன்சடை
தன்மேல்
தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும்
நுழைவித்து,
வார் அணி கொங்கை நல்லாள் தனோடும் வலஞ்சுழி
மேவியவர்
ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே!
2 |
|
உரை
|
|
|
|
|
3936. |
பொன் இயலும் திருமேனி தன்மேல் புரிநூல்
பொலிவித்து
மின் இயலும் சடை தாழ, வேழ உரி போர்த்து, அரவு ஆட,
மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழி வாணர்
தம்மேல்
உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம்; பிணி
போமே. 3 |
|
உரை
|
|
|
|
|
3937. |
விடை, ஒரு பால்; ஒரு பால் விரும்பு மெல்லியல்;
புல்கியது
ஓர்
சடை, ஒரு பால்; ஒருபால் இடம் கொள் தாழ்குழல் போற்று
இசைப்ப,
நடை, ஒரு பால்; ஒருபால் சிலம்பு; நாளும் வலஞ்சுழி சேர்
அடை, ஒரு பால்; அடையாத செய்யும் செய்கை
அறியோமே! 4 |
|
உரை
|
|
|
|
|
3938. |
கை அமரும் மழு, நாகம், வீணை, கலைமான்
மறி, ஏந்தி;
மெய் அமரும் பொடிப் பூசி; வீசும் குழை ஆர்தரு தோடும்
பை அமரும்(ம்) அரவு ஆட, ஆடும் படர் சடையார்க்கு
இடம் ஆம்
மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே.
5 |
|
உரை
|
|
|
|
|
3939. |
தண்டொடு சூலம் தழைய ஏந்தி, தையல் ஒருபாகம்
கண்டு, இடு பெய் பலி பேணி நாணார், கரியின் உரி-தோலர்,
வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி
மன்னியவர்
தொண்டொடு கூடித் துதைந்து நின்ற தொடர்பைத்
தொடர்வோமே. 6 |
|
உரை
|
|
|
|
|
3940. |
கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து,
வளையாதார்
சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான், இடர் நீங்க
மல் இயலும் திரள்தோள் எம் ஆதி, வலஞ்சுழி மா நகரே
புல்கிய வேந்தனைப் புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே.
7 |
|
உரை
|
|
|
|
|
3941. |
வெஞ்சின வாள் அரக்கன், வரையை விறலால்
எடுத்தான்,
தோள
அஞ்சும் ஒரு ஆறு இரு நான்கும் ஒன்றும் அடர்த்தார்;
அழகு ஆய
நஞ்சு இருள் கண்டத்து நாதர்; என்றும் நணுகும்
இடம்போலும்
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா
நகரே. 8 |
|
உரை
|
|
|
|
|
3942. |
ஏடு இயல் நான்முகன், சீர் நெடுமால், என
நின்றவர் காணாா
கூடிய கூர் எரி ஆய் நிமிர்ந்த குழகர்; உலகு ஏத்த
வாடிய வெண்தலை கையில் ஏந்தி; வலஞ்சுழி மேய எம்மான்-
பாடிய நால்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே! 9 |
|
உரை
|
|
|
|
|
3943. |
குண்டரும் புத்தரும், கூறை இன்றிக் குழுவார்,
உரை நீத்து
தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான்; அழல்
ஆடி
வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன்;
எம்மான்
பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே.
10 |
|
உரை
|
|
|
|
|
3944. |
வாழி எம்மான், எனக்கு எந்தை, மேய வலஞ்சுழி
மா
நகர்மேல்,
காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ்மாலை,
ஆழி இவ் வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும்
ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும்; உருவும் உயர்வு ஆமே.
11 |
|
உரை
|
|
|
|