தொடக்கம் |
110. திருப்பிரமபுரம் - ஈரடி - பழம்பஞ்சுரம்
|
|
|
3978. |
வரம் அதே கொளா, உரம் அதே செயும் புரம்
எரித்தவன்-பிரமநல்புரத்து
அரன்-நன்நாமமே பரவுவார்கள் சீர் விரவும், நீள் புவியே. 1 |
|
உரை
|
|
|
|
|
3979. |
சேண் உலாம் மதில் வேணு மண் உளோர் காண
மன்றில்
ஆர் வேணுநல்புரத்
தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே. 2 |
|
உரை
|
|
|
|
|
3980. |
அகலம் ஆர் தரைப் புகலும் நால்மறைக்கு
இகல் இலோர்கள்
வாழ் புகலி மா நகர்,
பகல் செய்வோன் எதிர்ச் சகல சேகரன் அகில நாயகனே.
3 |
|
உரை
|
|
|
|
|
3981. |
துங்க மாகரி பங்கமா அடும் செங் கையான்
நிகழ்
வெங்குருத் திகழ்
அங்கணான் அடி தம் கையால்-தொழ, தங்குமோ, வினையே?
4 |
|
உரை
|
|
|
|
|
3982. |
“காணி, ஒண் பொருள், கற்றவர்க்கு ஈகை
உடைமையோர்
அவர் காதல் செய்யும் நல்-
தோணிவண் புரத்து ஆணி” என்பவர் தூ மதியினரே. 5 |
|
உரை
|
|
|
|
|
3983. |
ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடைப்
பூந் தண் ஓதியாள்
சேர்ந்த பங்கினன்
பூந்தராய் தொழும் மாந்தர் மேனிமேல் சேர்ந்து இரா,
வினையே. 6 |
|
உரை
|
|
|
|
|
3984. |
“சுரபுரத்தினைத் துயர் செய் தாருகன் துஞ்ச,
வெஞ்சினக்
காளியைத் தரும்
சிரபுரத்து உளான்” என்ன வல்லவர் சித்தி பெற்றவரே. 7 |
|
உரை
|
|
|
|
|
3985. |
“உறவும் ஆகி, அற்றவர்களுக்கு மா நெதி
கொடுத்து, நீள்
புவி இலங்கு சீர்ப்
புறவ மா நகர்க்கு இறைவனே!” என, தெறகிலா, வினையே.
8 |
|
உரை
|
|
|
|
|
3986. |
பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள்
பத்தையும்
கெட நெரித்தவன்,
சண்பை ஆதியைத் தொழுமவர்களைச் சாதியா, வினையே.
9 |
|
உரை
|
|
|
|
|
3987. |
ஆழி அங்கையில் கொண்ட மால், அயன்,
அறிவு ஒணாதது
ஓர் வடிவு கொண்டவன்-
காழி மா நகர்க் கடவுள் நாமமே கற்றல் நல்-தவமே. 10 |
|
உரை
|
|
|
|
|
3988. |
விச்சை ஒன்று இலாச் சமணர் சாக்கியப்
பிச்சர் தங்களைக்
கரிசு அறுத்தவன்
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள்
கூறுமினே! 11 |
|
உரை
|
|
|
|
|
3989. |
கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன்
இன்தமிழ்
முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும், முக்கண் எம்
இறையே.
12 |
|
உரை
|
|
|
|