தொடக்கம் |
111. திருவீழிமிழலை - ஈரடி - பழம்பஞ்சுரம்
|
|
|
3990. |
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை பங்கன்-அங்கணன்,
மிழலை மா நகர்
ஆல நீழலில் மேவினான்-அடிக்கு அன்பர் துன்பு இலரே.
1 |
|
உரை
|
|
|
|
|
3991. |
விளங்கும் நால்மறை வல்ல வேதியர் மல்கு
சீர் வளர்
மிழலையான் அடி
உளம் கொள்வார் தமை உளம்கொள் வார் வினை ஒல்லை
ஆசு அறுமே. 2 |
|
உரை
|
|
|
|
|
3992. |
விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு
செய்தவன்,
மிழலை மா நகர்
இசையும் ஈசனை நசையின் மேவினால், மிசை செயா,
வினையே. 3 |
|
உரை
|
|
|
|
|
3993. |
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை
மா நகர் மேவி
நாள்தொறும்,
நின்ற ஆதிதன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே.
4 |
|
உரை
|
|
|
|
|
3994. |
போதகம் தனை உரி செய்தோன், புயல் நேர்
வரும் பொழில்
மிழலை மா நகர்
ஆதரம் செய்த அடிகள், பாதம் அலால் ஒர் பற்று இலமே.
5 |
|
உரை
|
|
|
|
|
3995. |
தக்கன் வேள்வியைச் சாடினார், மணி தொக்க
மாளிகை
மிழலை மேவிய
நக்கனார், அடி தொழுவர் மேல் வினை நாள்தொறும்
கெடுமே. 6 |
|
உரை
|
|
|
|
|
3996. |
போர் அணாவு முப்புரம் எரித்தவன், பொழில்கள்
சூழ்தரு
மிழலை மா நகர்ச்
சேரும் ஈசனைச் சிந்தை செய்பவர் தீவினை கெடுமே. 7 |
|
உரை
|
|
|
|
|
3997. |
இரக்கம் இல்-தொழில் அரக்கனார் உடல்
நெருக்கினான்,
மிகு மிழலையான், அடி
சிரக் கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும், நீள்
புவியே. 8 |
|
உரை
|
|
|
|
|
3998. |
துன்று பூமகன், பன்றி ஆனவன், ஒன்றும் ஓர்கிலா
மிழலையான் அடி
சென்று பூம்புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே. 9 |
|
உரை
|
|
|
|
|
3999. |
புத்தர், கைச் சமண்பித்தர், பொய்க்
குவை வைத்த வித்தகன்
மிழலை மா நகர்
சித்தம் வைத்தவர் இத் தலத்தினுள் மெய்த் தவத்தவரே.
10 |
|
உரை
|
|
|
|
|
4000. |
சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனைச் சண்பை
ஞானசம்பந்தன் வாய் நவில்
பந்தம் ஆர் தமிழ்பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே. 11 |
|
உரை
|
|
|
|