116. திருவீழிமிழலை - திருஇயமகம் - பழம்பஞ்சுரம்
 
4046. துன்று கொன்றை நம் சடையதே; தூய கண்டம் நஞ்சு
                                                         அடையதே;
கன்றின்மான் இடக் கையதே; கல்லின்மான் இடக்கை அதே;
என்றும் ஏறுவது இடவமே; என் இடைப் பலி இட வ(ம்)மே!
நின்றதும் மிழலையுள்ளுமே; நீர் எனைச் சிறிதும் உள்ளுமே!
                                                                        1
உரை
   
4047. ஓதி வாயதும் மறைகளே; உரைப்பதும் பலமறைகளே
பாதி கொண்டதும் மாதையே; பணிகின்றேன், மிகும் மாதையே;
காது சேர் கனம் குழையரே; காதலார் கனம் குழையரே;
வீதிவாய் மிகும் வேதியா; மிழலை மேவிய வேதியா!         2
உரை
   
4048. பாடுகின்ற பண் தாரமே; பத்தர் அன்ன பண்டாரமே;
சூடுகின்றது மத்தமே; தொழுத என்னை உன்மத்தமே
நீடு செய்வதும் தக்கதே? நின் அரைத் திகழ்ந்தது அக்கு
                                                             அதே;
நாடு சேர் மிழலை, ஊருமே; நாகம் நஞ்சு அழலை ஊருமே.
                                                                 3
உரை
   
4049. கட்டுகின்ற கழல் நாகமே; காய்ந்ததும் மதனன் ஆகமே;
இட்டம் ஆவது இசை பாடலே; இசைந்த நூலின் அமர்பு
                                                           ஆடலே;
கொட்டுவான் முழவம், வாணனே; குலாய சீர் மிழலை
                                                         வாணனே!
நட்டம் ஆடுவது சந்தியே; நான் உய்தற்கு இரவு சந்தியே!
                                                               4
உரை
   
4050. ஓவு இலாது இடும் கரணமே, உன்னும் என்னுடைக் கரணமே;
ஏவு சேர்வும் நின் ஆணையே; அருளில் நின்ன பொற்று
                                                        ஆணையே;
பாவியாது உரை மெய் இலே; பயின்ற நின் அடி மெய்யிலே
மேவினான் விறல் கண்ணனே மிழலை மேய முக்கண்ணனே!
                                                                        5
உரை
   
4051. வாய்ந்த மேனி எரிவண்ணமே; மகிழ்ந்து பாடுவது வண்ணமே;
காய்ந்து வீழ்ந்தவன் காலனே; கடு நடம் செயும் காலனே;
போந்தது எம் இடை இரவிலே; உம் இடைக் கள்வம்
                                                          இரவிலே;
ஏய்ந்ததும் மிழலை என்பதே; விரும்பியே அணிவது என்பு
                                                      அதே.      6
உரை
   
4052. அப்பு இயன்ற கண் அயனுமே, அமரர்கோமகனும், அயனுமே,
ஒப்பு இல் இன்று, அமரர், தருவதே, ஒண் கையால் அமரர்
                                                          தரு அதே;
மெய்ப் பயின்றவர், இருக்கையே, மிழலை ஊர் உமது
                                                      இருக்கையே;
செப்புமின்(ன்), எருது மேயுமே! சேர்வு உமக்கு எருதும்
                                                        ஏயுமே.      7
உரை
   
4053. தானவக் குலம் விளக்கியே, தாரகைச் செலவு இளக்கியே,
வான் அடர்த்த கயில் ஆயமே, வந்து மேவு கயிலாயமே
தான் எடுத்த வல் அரக்கனே, தட முடித்திரள் அரக்கனே,
மேல் நடைச் செல இருப்பனே; மிழலை நன் பதி
                                                  விருப்பனே.      8
உரை
   
4054. காயம் மிக்கது ஒரு பன்றியே, கலந்த நின்ன உருபு
                                                         அன்றியே,
ஏய இப் புவி மயங்கவே, இருவர்தாம் மனம் அயங்கவே,
தூய மெய்த்திரள் அகண்டனே! தோன்றி நின்ற
                                                     மணிகண்டனே!
மேய இத் துயில் விலக்கு, அ(ண்)ணா! மிழலை மேவிய
                                              இலக்கணா!      9
உரை
   
4055. கஞ்சியைக் குலவு கையரே, கலக்கம் ஆர் அமணர்கையரே,
அஞ்ச, வாதில் அருள் செய்யநீ, அணைந்திடும் பரிசு செய்ய,
                                                                   நீ
வஞ்சனே! வரவும் வல்லையே, மதித்து, எனைச் சிறிதும்
                                                           வல்லையே?
வெஞ்சல் இன்றி வரு இவ் தகா மிழலை சேரும் விறல்
                                                  வித்தகா!      10
உரை
   
4056. மேய செஞ்சடையின் அப்பனே! மிழலை மேவிய என்
                                                       அப்பனே!
ஏயுமா செய இருப்பனே இசைந்தவா செய விருப்பனே!
காய வர்க்க(அ) சம்பந்தனே! காழி ஞானசம்பந்தனே
வாய் உரைத்த தமிழ்பத்துமே வல்லவர்க்கும் இவை
                                              பத்துமே.      11
உரை