தொடக்கம் |
124. திருக்குருகாவூர் - வெள்ளடை - அந்தாளிக்குறிஞ்சி
|
|
|
4131. |
சுண்ண வெண்நீறு அணி மார்பில்-தோல் புனைந்து
எண்ண(அ)ரும் பல்கணம் ஏத்த, நின்று ஆடுவர்
விண் அமர் பைம்பொழில் வெள்ளடை மேவிய
பெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே. 1 |
|
உரை
|
|
|
|
|
4132. |
திரை புல்கு கங்கை திகழ் சடை வைத்து
வரை மகளோடு உடன் ஆடுதிர் மல்கு
விரை கமழ் தண்பொழில் வெள்ளடை மேவிய
அரை மல்கு வாள் அரவு ஆட்டு உகந்தீரே! 2 |
|
உரை
|
|
|
|
|
4133. |
அடையலர் தொல்-நகர் மூன்று எரித்து, அன்ன-
நடை மடமங்கை ஒர்பாகம் நயந்து,
விடை உகந்து ஏறுதிர் வெள்ளடை மேவிய
சடை அமர் வெண்பிறைச் சங்கரனீரே! 3 |
|
உரை
|
|
|
|
|
4134. |
வளம் கிளர் கங்கை மடவரலோடு
களம் பட ஆடுதிர், காடு அரங்கு ஆக;
விளங்கிய தண்பொழில் வெள்ளடை மேவிய
இளம்பிறை சேர் சடை எம்பெருமானே! 4 |
|
உரை
|
|
|
|
|
4135. |
சுரிகுழல் நல்ல துடியிடையோடு
பொரி புல்கு காட்டு இடை ஆடுதிர், பொங்க;
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரி மழுவாள் படை எந்தைபிரானே! 5 |
|
உரை
|
|
|
|
|
4136. |
காவி அம் கண் மடவாளொடும் காட்டு இடைத்
தீ அகல் ஏந்தி நின்று ஆடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினில் ஐந்து கொண்டு ஆட்டு உகந்தீரே! 6 |
|
உரை
|
|
|
|