தொடக்கம் |
126. திருவிடைவாய்
|
|
|
4148. |
மறி ஆர் கரத்து எந்தை, அம் மாது உமையோடும்
பிறியாத பெம்மான், உறையும் இடம் என்பர்
பொறி வாய் வரிவண்டு தன் பூம் பெடை புல்கி,
வெறி ஆர் மலரில் துயிலும் விடைவாயே. 1 |
|
உரை
|
|
|
|
|
4149. |
ஒவ்வாத என்பே இழையா, ஒளி மௌலிச்
செவ்வான் மதி வைத்தவர் சேர்வு இடம் என்பர்
எவ்வாயிலும் ஏடு அலர் கோடல் அம்போது
வெவ் வாய் அரவம் மலரும் விடைவாயே. 2 |
|
உரை
|
|
|
|
|
4150. |
கரை ஆர் கடல் நஞ்சு அமுது உண்டவர், கங்கைத்
திரை ஆர் சடைத் தீவண்ணர், சேர்வு இடம் என்பர்
குரை ஆர் மணியும் குளிர்சந்தமும் கொண்டு
விரை ஆர் புனல் வந்து இழியும் விடைவாயே. 3 |
|
உரை
|
|
|
|
|
4151. |
கூச, தழல் போல் விழியா வரு கூற்றைப்
பாசத்தொடும் வீழ உதைத்தவர் பற்று ஆம்
வாசக் கதிர்ச்சாலி வெண்சாமரையே போல்
வீச, களி அன்னம் மல்கும் விடைவாயே. 4 |
|
உரை
|
|
|
|
|
4152. |
திரியும் புரம் மூன்றையும் செந்தழல் உண்ண,
எரி அம்பு எய்த குன்றவில்லி இடம் என்பர்
கிரியும் தரு மாளிகைச் சூளிகை தன்மேல்
விரியும் கொடி வான் விளிசெய் விடைவாயே. 5 |
|
உரை
|
|
|
|
|
4153. |
கிள்ளை மொழியாளை இகழ்ந்தவன் முத்தீத்
தள்ளி, தலை தக்கனைக் கொண்டவர் சார்வு ஆம்
வள்ளிமருங்குல், நெருங்கும் முலை, செவ்வாய்,
வெள்ளை(ந்)நகையார் நடம் செய் விடைவாயே. 6 |
|
உரை
|
|
|
|
|
4154. |
பாதத்து ஒலி பாரிடம் பாட, நடம்செய்
நாதத்து ஒலியர் நவிலும் இடம் என்பர்
கீதத்து ஒலியும், கெழுமும் முழவோடு
வேதத்து ஒலியும், பயிலும் விடைவாயே. 7 |
|
உரை
|
|
|
|
|
4155. |
எண்ணாத அரக்கன் உரத்தை நெரித்து
பண் ஆர்தரு பாடல் உகந்தவர் பற்று ஆம்
கண் ஆர் விழவின் கடிவீதிகள் தோறும்
விண்ணோர்களும் வந்து இறைஞ்சும் விடைவாயே. 8 |
|
உரை
|
|
|
|
|
4156. |
புள் வாய் பிளந்தான், அயன், பூமுடி பாதம்,
ஒள்வான் நிலம், தேடும் ஒருவர்க்கு இடம் ஆம்
தெள் வார் புனல் செங்கழுநீர் முகை தன்னில்
விள் வாய் நறவு உண்டு, வண்டு ஆர் விடைவாயே. 9 |
|
உரை
|
|
|
|
|
4157. |
உடை ஏதும் இலார், துவர் ஆடை உடுப்போர்
கிடையா நெறியான் கெழுமும் இடம் என்பர்
அடையார் புரம் வேவ, மூவர்க்கு அருள்செய்த
விடை ஆர் கொடியான் அழகு ஆர் விடைவாயே. 10 |
|
உரை
|
|
|
|
|
4158. |
ஆறும் மதியும் பொதி வேணியன் ஊர் ஆம்
மாறு இல் பெருஞ் செல்வம் மலி விடைவாயை,
நாறும் பொழில் காழியர் ஞானசம்பந்தன்
கூறும் தமிழ் வல்லவர், குற்றம் அற்றோரே. 11 |
|
உரை
|
|
|
|