தொடக்கம் |
|
|
4.2 திருஅதிகைவீரட்டானம் காந்தாரம் |
11 | சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும், வண்ண இரிவை உடையும், வளரும் பவள நிறமும், அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும், திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. |
|
உரை
|
|
|
|
|
12 | பூண்டது ஒர் கேழல் எயிறும், பொன் திகழ் ஆமை புரள, நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலாக் கதிர் போல வெண் நூலும், காண் தகு புள்ளின் சிறகும், கலந்த கட்டங்கக் கொடியும், ஈண்டு கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. |
|
உரை
|
|
|
|
|
13 | ஒத்த வடத்து இள நாகம் உருத்திர பட்டம் இரண்டும், முத்துவடக் கண்டிகையும், முளைத்து, எழு மூ இலை வேலும், சித்த வடமும், அதிகைச் சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து தத்தும் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்! அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை |
|
உரை
|
|
|
|
|
14 | மடமான் மறி, பொன் கலையும், மழு, பாம்பு, ஒரு கையில் வீணை, குடமால் வரைய திண் தோளும், குனி சிலைக் கூத்தின் பயில்வும், இடம் மால் தழுவிய பாகம், இரு நிலன் ஏற்ற சுவடும், தடம் ஆர் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. |
|
உரை
|
|
|
|
|
15 | பலபல காமத்தர் ஆகிப் பதைத்து எழுவார் மனத்துள்ளே கலமலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும், வலம் ஏந்து இரண்டு சுடரும், வான் கயிலாயமலையும், நலம் ஆர் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்! அஞ்சுவது யாதென்றும் இல்லை: அஞ்ச வருவதும் இல்லை. |
|
உரை
|
|
|
|
|
16 | கரந்தன கொள்ளி விளக்கும், கறங்கு துடியின் முழக்கும், பரந்த பதினெண் கணமும், பயின்று அறியாதன பாட்டும், அரங்கு இடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும், நிரந்த கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. |
|
உரை
|
|
|
|
|
17 | கொலை வரி வேங்கை அதளும், குலவோடு இலங்கு பொன் தோடும், விலை பெறு சங்கக் குழையும், விலை இல் கபாலக் கலனும், மலைமகள் கைக்கொண்ட மார்பும், மணி ஆர்ந்து இலங்கு மிடறும், உலவு கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. |
|
உரை
|
|
|
|
|
18 | ஆடல் புரிந்த நிலையும், அரையில் அசைத்த அரவும், பாடல் பயின்ற பல் பூதம், பல் ஆயிரம் கொள் கருவி நாடற்கு அரியது ஒர் கூத்தும், நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து ஓடும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. |
|
உரை
|
|
|
|
|
19 | சூழும் அரவத்துகிலும், துகில் கிழி கோவணக்கீளும், யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற வேழம் உரித்த நிலையும், விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து தாழும் கெடிலப்புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. |
|
உரை
|
|
|
|
|
20 | நரம்பு எழு கைகள் பிடித்து, நங்கை நடுங்க, மலையை உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற, வரங்கள் கொடுத்து அருள் செய்வான், வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து நிரம்பு கெடிலப்புனலும் உடையார் ஒருவர் தமர், நாம்!- அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை. |
|
உரை
|
|
|
|