தொடக்கம் |
|
|
4.7 திருக்கச்சி ஏகம்பம் காந்தாரம் |
62 | கரவு ஆடும் வன்நெஞ்சர்க்கு அரியானை; கரவார்பால் விரவாடும் பெருமானை; விடை ஏறும் வித்தகனை; அரவு ஆட, சடை தாழ, அங்கையினில் அனல் ஏந்தி, இரவு ஆடும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே! |
|
உரை
|
|
|
|
|
63 | தேன் நோக்கும் கிளிமழலை உமை கேள்வன், செழும் பவளம் தான் நோக்கும் திருமேனி தழல் உரு ஆம் சங்கரனை; வான் நோக்கும் வளர்மதி சேர் சடையானை; வானோர்க்கும் ஏனோர்க்கும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே! |
|
உரை
|
|
|
|
|
64 | கைப் போது மலர் தூவி, காதலித்து, வானோர்கள் முப்போதும் முடி சாய்த்து, தொழ நின்ற முதல்வனை; அப்போடு மலர் தூவி, ஐம்புலனும் அகத்து அடக்கி, எப்போதும் இனியானை:-என் மனத்தே வைத்தேனே! |
|
உரை
|
|
|
|
|
65 | அண்டம் ஆய், ஆதி ஆய், அருமறையோடு ஐம்பூதப் பிண்டம் ஆய், உலகுக்கு ஒர் பெய் பொருள் ஆம் பிஞ்ஞகனை; தொண்டர் தாம் மலர் தூவிச் சொல் மாலை புனைகின்ற இண்டை சேர் சடையானை;-என் மனத்தே வைத்தேனே! |
|
உரை
|
|
|
|
|
66 | ஆறு ஏறு சடையானை, ஆயிரம் பேர் அம்மானை, பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை, நீறு ஏறு திருமேனி நின்மலனை, நெடுந் தூவி ஏறு ஏறும் பெருமானை;-என் மனத்தே வைத்தேனே! |
|
உரை
|
|
|
|
|
67 | தேசனை; தேசங்கள் தொழ நின்ற திருமாலால் பூசனை; சனைகள் உகப்பானை; பூவின் கண் வாசனை; மலை, நிலம், நீர், தீ, வளி, ஆகாசம், ஆம் ஈசனை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே! |
|
உரை
|
|
|
|
|
68 | நல்லானை, நல் ஆன நால்மறையோடு ஆறு அங்கம் வல்லானை, வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை, சொல்லானை, சொல் ஆர்ந்த பொருளானை, துகள் ஏதும் இல்லானை, எம்மானை;-என் மனத்தே வைத்தேனே! |
|
உரை
|
|
|
|
|
69 | விரித்தானை, நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் புரித்தானை, பதம் சந்தி; பொருள் உரு ஆம் புண்ணியனை; தரித்தானை, கங்கை நீர், தாழ் சடை மேல்; மதில் மூன்றும் எரித்தானை; எம்மானை;-என் மனத்தே வைத்தேனே! |
|
உரை
|
|
|
|
|
70 | ஆகம் பத்து அரவு அணையான், அயன், அறிதற்கு அரியானை; பாகம் பெண் ஆண் பாகம் ஆய் நின்ற பசு பதியை; மா கம்பம் மறை ஓதும் இறையானை; மதில் கச்சி ஏகம்பம் மேயானை;-என் மனத்தே வைத்தேனே! |
|
உரை
|
|
|
|
|
71 | அடுத்த ஆனை உரித்தானை; அருச்சுனற்குப் பாசுபதம் கொடுத்தானை; குலவரையே சிலை ஆகக் கூர் அம்பு தொடுத்தானை, புரம் எரிய; சுனை மல்கு கயிலாயம் எடுத்தானைத் தடுத்தானை;-என் மனத்தே வைத்தேனே! |
|
உரை
|
|
|
|