தொடக்கம் |
|
|
4.10 திருஅதிகைவீரட்டானம் காந்தாரபஞ்சமம் |
94 | முளைக்கதிர் இளம் பிறை மூழ்க, வெள்ள நீர் வளைத்து எழு சடையினர்; மழலை வீணையர்; திளைத்தது ஓர் மான் மறிக் கையர்-செய்ய பொன் கிளைத்துழித் தோன்றிடும் கெடில வாணரே. |
|
உரை
|
|
|
|
|
95 | ஏறினர், ஏறினை; ஏழை தன் ஒரு- கூறினர்; கூறினர், வேதம்; அங்கமும் ஆறினர்; ஆறு இடு சடையர்; பக்கமும் கீறின உடையினர்-கெடில வாணரே. |
|
உரை
|
|
|
|
|
96 | விடம் திகழ் கெழு தரு மிடற்றர்; வெள்ளை நீறு உடம்பு அழகு எழுதுவர்-முழுதும் வெண் நிலாப் படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய்புனல் கிடந்து அழகு எழுதிய கெடில வாணரே. |
|
உரை
|
|
|
|
|
97 | விழும் மணி அயில் எயிற்று அம்பு, வெய்யது ஓர் கொழு மணி நெடுவரை கொளுவிக் கோட்டினார் செழு மணிமிடற்றினர்; செய்யர்; வெய்யது ஓர் கெழு மணி அரவினர்-கெடில வாணரே. |
|
உரை
|
|
|
|
|
98 | குழுவினர் தொழுது எழும் அடியர்மேல் வினை தழுவின கழுவுவர், பவள மேனியர், மழுவினர், மான் மறிக் கையர், மங்கையைக் கெழுவின யோகினர்-கெடில வாணரே. |
|
உரை
|
|
|
|
|
99 | அங்கையில் அனல்-எரி ஏந்தி, ஆறு எனும் மங்கையைச் சடை இடை மணப்பர்; மால்வரை- நங்கையைப் பாகமும் நயப்பர்-தென் திசைக் கெங்கை அது எனப்படும் கெடில வாணரே. |
|
உரை
|
|
|
|
|
100 | கழிந்தவர் தலை கலன் ஏந்தி, காடு உறைந்து “இழிந்தவர் ஒருவர்!” என்று எள்க, வாழ்பவர்- வழிந்து இழி மதுகரம் மிழற்ற, மந்திகள் கிழிந்த தேன் நுகர் தரும் கெடில வாணரே. |
|
உரை
|
|
|
|
|
101 | கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேது உற, கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற, கிடந்த நீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே, கிடந்து தான் நகுதலைக் கெடில வாணரே. |
|
உரை
|
|
|
|
|
102 | வெறி உறு விரிசடை புரள வீசி, ஓர் பொறி உறு புலி உரி அரையது ஆகவும், நெறி உறு குழல் உமை பாகம் ஆகவும், கிறி பட உழிதர்வர்-கெடில வாணரே! |
|
உரை
|
|
|
|
|
103 | பூண்ட தேர் அரக்கனை, பொரு இல் மால்வரைத் தூண்டு தோள் அவை பட, அடர்த்த தாளினார் ஈண்டு நீர்க் கமலவாய், மேதி பாய் தர, கீண்டு தேன் சொரிதரும் கெடில வாணரே. |
|
உரை
|
|
|
|