தொடக்கம் |
|
|
4.12 திருப்பழனம் பழந்தக்கராகம் |
114 | சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள்! சொல்லீரே- பல் மாலை வரிவண்டு பண் மிழற்றும் பழனத்தான், முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடிச் சென்னிப் பொன் மாலை மார்பன்(ன்), என புது நலம் உண்டு இகழ்வானோ? |
|
உரை
|
|
|
|
|
115 | கண்டகங்காள்! முண்டகங்காள்! கைதைகாள்! நெய்தல்காள பண்டரங்க வேடத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான், வண்டு உலா(அ)ம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர்வண்ணம் கொண்ட(ந்)நாள் தான் அறிவான், குறிக் கொள்ளா தொழிவானோ? |
|
உரை
|
|
|
|
|
116 | மனைக் காஞ்சி இளங் குருகே! மறந்தாயோ?-மத முகத்த பனைக்கை மா உரி போர்த்தான், பலர் பாடும் பழனத்தான், நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ, நிகழ் வண்டே?- சுனைக்கு வளைமலர்க்கண்ணாள் சொல்-தூது ஆய்ச் சோர்வார் |
|
உரை
|
|
|
|
|
117 | புதியை ஆய் இனியை ஆம் பூந் தென்றல்!” புறங்காடு பதி ஆவது இது” என்று பலர் பாடும் பழனத்தான், மதியா தார் வேள்வி தனை மதித்திட்ட மதி கங்கை விதியாளன், என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ? |
|
உரை
|
|
|
|
|
118 | மண் பொருந்தி வாழ்பவர்க்கும், மா தீர்த்த வேதியர்க்கும், விண் பொருந்து தேவர்க்கும், வீடு பேறு ஆய் நின்றானை; பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை, என் கண் பொருந்தும் போழ் தத்தும், கைவிட நான் கடவேனோ? |
|
உரை
|
|
|
|
|
119 | பொங்கு ஓதமால் கடலில் புறம் புறம் போய் இரை தேரும் செங்கால் வெண் மட நாராய்! செயல் படுவது அறியேன், நான்! அம் கோல வளை கவர்ந்தான், அணி பொழில் சூழ் பழனத்தான், தம் கோல நறுங்கொன்றைத்தார் அருளா தொழி வானோ? |
|
உரை
|
|
|
|
|
120 | துணை ஆர முயங்கிப் போய்த் துறை சேரும் மடநாராய்! பணை ஆரவாரத்தான், பாட்டு ஓவாப் பழனத்தான், கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடி செய்த இணை ஆர மார்பன்(ன்) என் எழில் நலம் உண்டு இகழ்வானோ? |
|
உரை
|
|
|
|
|
121 | கூவைவாய் மணி வரன்றிக் கொழித்து ஓடும் காவிரிப்பூம்- பாவை வாய் முத்து இலங்கப் பாய்ந்து ஆடும் பழனத்தான், கோவைவாய் மலைமகள் கோன், கொல் ஏற்றின் கொடி ஆடைப் பூவைகாள்! மழலைகாள்! போகாத பொழுது உளதே? |
|
உரை
|
|
|
|
|
122 | “புள்ளிமான் பொறி அரவம், புள் உயர்த்தான் மணி நாகப்- பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான் உள்ரூவார் வினை தீர்க்கும்” என்று உரைப்பர், உலகு எல்லாம்; கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ? |
|
உரை
|
|
|
|
|
123 | வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும், பஞ்சிக்கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான் அஞ்சிப் போய்க் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி குஞ்சிப் பூ ஆய் நின்ற சேவடியாய்!-கோடு இயையே! |
|
உரை
|
|
|
|