தொடக்கம் |
|
|
4.16 திருப்புகலூர் இந்தளம் |
156 | செய்யர்; வெண்நூலர்; கருமான் மறி துள்ளும் கையர்; கனைகழல் கட்டிய காலினர்; மெய்யர், மெய்ந்நின்றவர்க்கு; அல்லாதவர்க்கு என்றும் பொய்யர்-புகலூர்ப் புரிசடையாரே. |
|
உரை
|
|
|
|
|
157 | மேக நல் ஊர்தியர், மின் போல் மிளிர்சடைப் பாகமதி நுதலாளை ஒர் பாகத்தர், நாக வளையினர், நாக உடையினர் போகர்-புகலூர்ப் புரிசடையாரே. |
|
உரை
|
|
|
|
|
158 | பெருந் தாழ் சடை முடி மேல் பிறை சூடி, கருந்தாழ் குழலியும் தாமும் கலந்து, திருந்தா மனம் உடையார் திறத்து என்றும் பொருந்தார்-புகலூர்ப் புரிசடையாரே. |
|
உரை
|
|
|
|
|
159 | அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர், நாகத்தர் நக்கு ஆர் இளமதிக் கண்ணியர், நாள்தொறும் உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர் தொறும் புக்கார்-புகலூர்ப் புரிசடையாரே. |
|
உரை
|
|
|
|
|
160 | ஆர்த்து ஆர் உயிர் அடும் அந்தகன் தன் உடல் பேர்த்தார், பிறைநுதல் பெண்ணின் நல்லாள் உட்கக் கூர்த்து ஆர் மருப்பின் கொலைக் களிற்று ஈர் உரி போர்த்தார்-புகலூர்ப் புரிசடையாரே. |
|
உரை
|
|
|
|
|
161 | தூ மன் சுறவம் துதைந்த கொடி உடைக் காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர், சேம நெறியினர்; சீரை உடையவர் பூ மன் புகலூர்ப் புரிசடையாரே. |
|
உரை
|
|
|
|
|
162 | உதைத்தார், மறலி உருள ஓர் காலால்; சிதைத்தார், திகழ் தக்கன் செய்த நல் வேள்வி; பதைத்தார் சிரம் கரம் கொண்டு, வெய்யோன் கண் புதைத்தார்-புகலூர்ப் புரிசடையாரே. |
|
உரை
|
|
|
|
|
163 | கரிந்தார் தலையர்; கடி மதில் மூன்றும், தெரிந்தார், கண்கள், செழுந் தழல் உண்ண; விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை புரிந்தார்-புகலூர்ப் புரிசடையாரே. |
|
உரை
|
|
|
|
|
164 | ஈண்டு ஆர் அழலின், இருவரும் கைதொழ, நீண்டார், நெடுந் தடுமாற்ற நிலை அஞ்ச; மாண்டார் தம் என்பும் மலர்க் கொன்றை மாலையும் பூண்டார்-புகலூர்ப் புரிசடையாரே. |
|
உரை
|
|
|
|
|
165 | கறுத்தார், மணிகண்டம் கால்விரல் ஊன்றி இறுத்தார், இலங்கையர் கோன் முடிபத்தும், அறுத்தார், புலன் ஐந்தும்; ஆயிழை பாகம் பொறுத்தார்-புகலூர்ப் புரிசடையாரே. |
|
உரை
|
|
|
|