தொடக்கம் |
|
|
4.17 திருஆரூர் அரநெறி இந்தளம் |
166 | எத் தீப் புகினும் எமக்கு ஒரு தீது இலை; தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர்; முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து அத் தீ நிறத்தார்-அரநெறியாரே. |
|
உரை
|
|
|
|
|
167 | வீரமும் பூண்பர்; விசயனொடு ஆயது ஒர் தாரமும் பூண்பர்; தமக்கு அன்புபட்டவர் பாரமும் பூண்பர்; நன் பைங் கண் மிளிர் அரவு- ஆரமும் பூண்பர்-அரநெறியாரே. |
|
உரை
|
|
|
|
|
168 | தஞ்ச வண்ணத்தர்; சடையினர்; தாமும் ஒர் வஞ்ச வண்ணத்தர்; வண்டு ஆர் குழலாளொடும் துஞ்ச வண்ணத்தர்; துஞ்சாத கண்ணார் தொழும் அஞ்ச வண்ணத்தர்-அரநெறியாரே. |
|
உரை
|
|
|
|
|
169 | விழித்தனர், காமனை வீழ்தர; விண் நின்று இழித்தனர், கங்கையை; ஏத்தினர் பாவம் கழித்தனர்; கல் சூழ் கடி அரண் மூன்றும் அழித்தனர்-ஆரூர் அரநெறியாரே. |
|
உரை
|
|
|
|
|
170 | துற்றவர், வெண் தலையில்; சுருள் கோவணம் தற்றவர்; தம் வினை ஆன எலாம் அற அற்றவர்; ஆரூர் அரநெறி கைதொழ உற்றவர் தாம் ஒளி பெற்றனர் தாமே. |
|
உரை
|
|
|
|
|
171 | கூடு அரவத்தர்; குரல் கிண்கிணி அடி நீடு அரவத்தர்; முன் மாலை இடை இருள் பாடு அரவத்தர்; பணம் அஞ்சுபை விரித்து ஆடு அரவத்தர் -அரநெறியாரே. |
|
உரை
|
|
|
|
|
172 | கூட வல்லார், குறிப்பில்(ல்), உமையாளொடும்; பாட வல்லார்; பயின்று அந்தியும் சந்தியும் ஆட வல்லார்; திரு ஆரூர் அரநெறி நாட வல்லார்; வினை வீட வல்லாரே. |
|
உரை
|
|
|
|
|
173 | பாலை நகு பனி வெண்மதி, பைங் கொன்றை, மாலையும் கண்ணியும் ஆவன; சேவடி காலையும் மாலையும் கை தொழுவார் மனம் ஆலயம்-ஆரூர் அரநெறியார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
174 | முடி வண்ணம் வான மின் வண்ணம்; தம் மார்பின் பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம்; படி வண்ணம் பாற்கடல் வண்ணம்; செஞ்ஞாயிறு அடி வண்ணம்-ஆரூர் அரநெறியார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
175 | பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல் இன் அருள் சூடி எள் காதும் இராப்பகல், மன்னவர் கின்னரர் வானவர் தாம், தொழும் அன்னவர்-ஆரூர் அரநெறியாரே. |
|
உரை
|
|
|
|
|
176 | பொருள் மன்னனைப் பற்றிப் புட்பகம் கொண்ட மருள் மன்னனை எற்றி, வாள் உடன் ஈந்து, கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட அருள் மன்னர்-ஆரூர் அரநெறியாரே. |
|
உரை
|
|
|
|