தொடக்கம் |
|
|
187 | சூலப் படை யானை; சூழ் ஆக வீழ் அருவி கோலத் தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை; பால் ஒத்த மென் மொழியாள் பங்கனை; பாங்கு ஆய ஆலத்தின் கீழானை;-நான் கண்டது ஆரூரே. |
|
உரை
|
|
|
|
|
188 | பக்கமே பாரிடங்கள் சூழ, படுதலையில் புக்க ஊர்ப் பிச்சை ஏற்று, உண்டு, பொலிவு உடைத்து ஆய்க் கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த, கோவணத்தோடு அக்கு அணிந்த, அம்மானை-நான் கண்டது ஆரூரே. |
|
உரை
|
|
|
|
|
189 | சேய உலகமும் செல் சார்வும் ஆனானை, மாயப் போர் வல்லானை, மாலை தாழ் மார்பானை, வேய் ஒத்த தோளியர் தம் மென் முலை மேல்-தண் சாந்தின் ஆயத்து இடையானை,-நான் கண்டது ஆரூரே. |
|
உரை
|
|
|
|
|
190 | ஏறு ஏற்றமா ஏறி, எண் கணமும் பின் படர, மாறு ஏற்றார் வல் அரணம் சீறி, மயானத்தின் நீறு ஏற்ற மேனியனாய், நீள் சடை மேல் நீர் ததும்ப ஆறு ஏற்ற அந்தணனை-நான் கண்டது ஆரூரே. |
|
உரை
|
|
|
|
|
191 | தாம் கோல வெள் எலும்பு பூண்டு, தம் ஏறு ஏறி, பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார் தேம் காவி நாறும் திரு ஆரூர்த் தொல்-நகரில் பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே. |
|
உரை
|
|
|
|
|
192 | எம் பட்டம் பட்டம் உடையானை, ஏர் மதியின் நும் பட்டம் சேர்ந்த நுதலானை, அந்திவாய்ச் செம்பட்டு உடுத்துச் சிறு மான் உரி ஆடை அம் பட்டு அசைத்தானை,-நான் கண்டது ஆரூரே. |
|
உரை
|
|
|
|
|
193 | போழ் ஒத்த வெண் மதியம் சூடிப் பொலிந்து இலங்கு வேழத்து உரி போர்த்தான், வெள் வளையாள் தான் வெருவ, ஊழித் தீ அன்னானை, ஒங்கு ஒலிமாப் பூண்டது ஓர் ஆழித் தேர் வித்தகனை,-நான் கண்டது ஆரூரே. |
|
உரை
|
|
|
|
|
194 | வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை, துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை, தன் தொண்டர் நெஞ்சின் இருள் கூரும்பொழுது நிலாப் பாரித்து அம் சுடர் ஆய் நின்றானை,-நான் கண்டது ஆரூரே. |
|
உரை
|
|
|
|
|
195 | கார முது கொன்றை கடி நாறு தண் என்ன நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன், பேர் அமுதம் உண்டார்கள் உய்யப் பெருங் கடல் நஞ்சு ஆர் அமுதா உண்டானை, -நான் கண்டது ஆரூரே. |
|
உரை
|
|
|
|
|
196 | தாள் தழுவு கையன், தாமரைப் பூஞ்சேவடியன், கோள் தால வேடத்தன், கொண்டது ஓர் வீணையினான், ஆடு அரவக் கிண்கிணிக் கால் அன்னான் ஓர் சேடனை, ஆடும் தீக் கூத்தனை,-நான் கண்டது ஆரூரே. |
|
உரை
|
|
|
|
|
197 | மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி, மணி விரலால், துஞ்சாப் போர் வாள் அரக்கன் தோள் நெரியக் கண் குருதிச்- செஞ் சாந்து அணிவித்து, தன் மார்பில் பால் வெண் நீற்று- அம்சாந்து அணிந்தானை-நான் கண்டது ஆரூரே. |
|
உரை
|
|
|
|