தொடக்கம் |
|
|
4.21 திருஆரூர் திரு ஆதிரைத் திருப்பதிகம் குறிஞ்சி |
208 | முத்து விதானம்; மணி பொன் கவரி; முறையாலே பத்தர்களோடு பாவையர் சூழப் பலிப் பின்னே வித்தகக் கோல வெண்தலைமாலை விரதிகள் அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! |
|
உரை
|
|
|
|
|
209 | நணியார் சேயார், நல்லார் தீயார், நாள்தோறும் பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும்;- “மணியே! பொன்னே! மைந்தா! மணாளா!” என்பார்கட்கு அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! |
|
உரை
|
|
|
|
|
210 | வீதிகள் தோறும் வெண் கொடியோடு விதானங்கள் சோதிகள் விட்டுச் சுடர் மா மணிகள்; ஒளி தோன்றச் சாதிகள் ஆய பவளமும் முத்துத் தாமங்கள் ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! |
|
உரை
|
|
|
|
|
211 | குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள் பிணங்கித் தம்மில் பித்தரைப் போலப் பிதற்றுவார் வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! |
|
உரை
|
|
|
|
|
212 | நில வெண் சங்கும் பறையும்(ம்) ஆர்ப்ப, நிற்கில்லாப் பலரும் இட்ட கல்ல வடங்கள் பரந்து, எங்கும் கலவ மஞ்ஞை கார் என்று எண்ணிக் களித்து வந்து அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! |
|
உரை
|
|
|
|
|
213 | விம்மா, வெருவா, விழியா, தெழியா, வெருட்டுவார்; தம் மாண்பு இலராய்த் தரியார், தலையான் முட்டுவார் “எம்மான், ஈசன், எந்தை, என் அப்பன்” என்பார்கட்கு அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! |
|
உரை
|
|
|
|
|
214 | செந்துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பாா மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார் இந்திரன் ஆதி வானவர், சித்தர், எடுத்து ஏத்தும் அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! |
|
உரை
|
|
|
|
|
215 | முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல, வடி கொள் வேய்த்தோள் வான் அரமங்கையர் பின் செல்ல, பொடிகள் பூசிப் பாடும் தொண்டர் புடை சூழ, அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! |
|
உரை
|
|
|
|
|
216 | “துன்பம், நும்மைத் தொழாத நாள்கள்” என்பாரும், “இன்பம், நும்மை ஏத்தும் நாள்கள்” என்பாரும், “நுன்பின் எம்மை நுழையப் பணியே!” என்பாரும்; அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்! |
|
உரை
|
|
|
|
|
217 | பார் ஊர் பௌவத்தானைப் பத்தர் பணிந்து ஏத்த, சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து, ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும் ஆரூரன் தன் ஆதிரை நாளால் அது வண்ணம்! |
|
உரை
|
|
|
|