தொடக்கம் |
|
|
4.22 கோயில் திரு நேரிசை கொல்லி |
218 | செஞ் சடைக்கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னி நஞ்சு அடை கண்டனாரைக் காணல் ஆம்; நறவம் நாறும் மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே துஞ்சு அடை இருள் கிழியத் துளங்கு எரி ஆடும் ஆறே! |
|
உரை
|
|
|
|
|
219 | ஏறனார், ஏறு; தம்பால் இளநிலா எறிக்கும் சென்னி ஆறனார்; ஆறு சூடி; ஆயிழையாள், ஓர் பாகம்; நாறு பூஞ்சோலைத் தில்லை நவின்ற சிற்றம்பலத்தே! நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே! |
|
உரை
|
|
|
|
|
220 | சடையனார்; சாந்த நீற்றர்; தனி நிலா எறிக்கும் சென்னி உடையனார்; உடை தலையில் உண்பதும், பிச்சை ஏற்று; கடி கொள் பூந் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே அடி கழல் ஆர்க்க நின்று (வ்) அனல்-எரி ஆடும் ஆறே! |
|
உரை
|
|
|
|
|
221 | பை அரவு அசைத்த அல்குல், பனி நிலா எறிக்கும் சென்னி மை அரிக் கண்ணினாளும் மாலும் ஓர் பாகம் ஆகி, செய் எரித் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே கை எரி வீசி நின்று கனல்- எரி ஆடும் ஆறே! |
|
உரை
|
|
|
|
|
222 | ஓதினார், வேதம் வாயால்; ஒளி நிலா எறிக்கும் சென்னிப் பூதனார்; பூதம் சூழப் புலி உரி-அதளனார், தாம்; நாதனார்; தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே காதில் வெண் குழைகள் தாழக் கனல்-எரி ஆடும் ஆறே! |
|
உரை
|
|
|
|
|
223 | ஓர் உடம்பு இருவர் ஆகி, ஒளி நிலா எறிக்கும் சென்னி, பாரிடம் பாணி செய்யப் பயின்ற, எம் பரம மூர்த்தி கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே! |
|
உரை
|
|
|
|
|
224 | முதல்-தனிச் சடையை மூழ்க முகிழ்நிலா எறிக்கும் சென்னி, மதக்களிற்று உரிவை போர்த்த, மைந்தரைக் காணல் ஆகும்; மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே கதத்தது ஓர் அரவம் ஆடக் கனல்-எரி ஆடும் ஆறே! |
|
உரை
|
|
|
|
|
225 | மறையனார், மழு ஒன்று ஏந்தி, மணி நிலா எறிக்கும் சென்னி இறைவனார், எம்பிரானார், ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் சிறை கொள் நீர்த் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே அறைகழல் ஆர்க்க நின்று அனல்-எரி ஆடும் ஆறே! |
|
உரை
|
|
|
|
|
226 | விருத்தனாய், பாலன் ஆகி, விரிநிலா எறிக்கும் சென்னி நிருத்தனார்; நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழக் கருத்தனார்; தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே அருத்த மா மேனி தன்னோடு அனல் -எரி ஆடும் ஆறே! |
|
உரை
|
|
|
|
|
227 | பாலனாய், விருத்தன் ஆகி, பனி நிலா எறிக்கும் சென்னி, காலனைக் காலால் காய்ந்த, கடவுளார்; விடை ஒன்று ஏறி; ஞாலம் ஆம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே- நீலம் சேர் கண்டனார் தாம்- நீண்டு எரி ஆடும் ஆறே! |
|
உரை
|
|
|
|
|
228 | மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி, நெதியன் தோள் நெரிய ஊன்றி, நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த, மதியம் தோய், தில்லை தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே அதிசயம் போல நின்று(வ்) அனல்-எரி ஆடும் ஆறே! |
|
உரை
|
|
|
|