4.23 கோயில்
திரு நேரிசை
கொல்லி
229பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே! பரம யோகீ!
எத்தினால் பத்தி செய்கேன்? என்னை நீ இகழவேண்டா;
முத்தனே! முதல்வா! தில்லை அம்பலத்து ஆடுகின்ற
அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே!
உரை
   
230கருத்தனாய்ப் பாட மாட்டேன்; காம்பு அன தோளி பங்கா!
ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திரு உரு உடைய சோதீ!
திருத்தம் ஆம் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே
நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே!
உரை
   
231கேட்டிலேன்; கிளைபிரி(ய்)யேன்; கேட்குமா கேட்டி ஆகில்
நாட்டினேன், நின் தன் பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே
மாட்டில் நீர் வாளை பாய, மல்கு சிற்றம்பலத்தே
கூட்டம் ஆம் குவி முலையாள் கூட நீ ஆடும் ஆறே!
உரை
   
232சிந்தையைத் திகைப் பியாதே செறிவு உடை அடிமை செய்ய,
எந்தை! நீ அருளிச் செய்யாய்! யாது நான் செய்வது? என்னே!
செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும் கொல்லோ!
உரை
   
233கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம்
கொண்டிருந்து ஆடிப் பாடிக் கூடுவன், குறிப்பினாலே;
வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
எண் திசையோரும் ஏத்த, இறைவ! நீ ஆடும் ஆறே!
உரை
   
234பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன்; பாடிஆடி
“மூர்த்தியே” என்பன்,-உன்னை,-’மூவரில் முதல்வன்” என்பன்;
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்! தில்லைச் சிற்றம்பலத்துக்
கூத்தா! உன் கூத்துக் காண்பான் கூட நான் வந்த ஆறே!
உரை
   
235பொய்யினைத் தவிர விட்டுப் புறம் அலா அடிமை செய்ய,
ஐய! நீ அருளிச் செய்யாய்! ஆதியே! ஆதிமூர்த்தி!
வையகம் தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே
பைய நின் ஆடல் காண்பான், பரம! நான் வந்த ஆறே!
உரை
   
236மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே
கனைப்பரால்; என் செய்கேனோ? கறை அணி கண்டத்தானே!
தினைத்தனை வேதம் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே
அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே!
உரை
   
237நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே
வஞ்சமே செய்தியாலோ, வானவர் தலைவனே! நீ;
மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
அம் சொலாள் காண நின்று, அழக! நீ ஆடும் ஆறே!
உரை
   
238மண் உண்ட மாலவ(ன்)னும், மலர்மிசை மன்னினானும்,
விண் உண்ட திரு உரு(வ்)வம் விரும்பினார்-காணமாட்டார்;
திண்ணுண்ட திருவே! மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே
பண்ணுண்ட பாடலோடும், பரம! நீ ஆடும் ஆறே!
உரை