தொடக்கம் |
|
|
4.23 கோயில் திரு நேரிசை கொல்லி |
229 | பத்தனாய்ப் பாட மாட்டேன்; பரமனே! பரம யோகீ! எத்தினால் பத்தி செய்கேன்? என்னை நீ இகழவேண்டா; முத்தனே! முதல்வா! தில்லை அம்பலத்து ஆடுகின்ற அத்தா! உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
230 | கருத்தனாய்ப் பாட மாட்டேன்; காம்பு அன தோளி பங்கா! ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திரு உரு உடைய சோதீ! திருத்தம் ஆம் தில்லை தன்னுள்-திகழ்ந்த சிற்றம்பலத்தே நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
231 | கேட்டிலேன்; கிளைபிரி(ய்)யேன்; கேட்குமா கேட்டி ஆகில் நாட்டினேன், நின் தன் பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே மாட்டில் நீர் வாளை பாய, மல்கு சிற்றம்பலத்தே கூட்டம் ஆம் குவி முலையாள் கூட நீ ஆடும் ஆறே! |
|
உரை
|
|
|
|
|
232 | சிந்தையைத் திகைப் பியாதே செறிவு உடை அடிமை செய்ய, எந்தை! நீ அருளிச் செய்யாய்! யாது நான் செய்வது? என்னே! செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும் கொல்லோ! |
|
உரை
|
|
|
|
|
233 | கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம் கொண்டிருந்து ஆடிப் பாடிக் கூடுவன், குறிப்பினாலே; வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே எண் திசையோரும் ஏத்த, இறைவ! நீ ஆடும் ஆறே! |
|
உரை
|
|
|
|
|
234 | பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன்; பாடிஆடி “மூர்த்தியே” என்பன்,-உன்னை,-’மூவரில் முதல்வன்” என்பன்; ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்! தில்லைச் சிற்றம்பலத்துக் கூத்தா! உன் கூத்துக் காண்பான் கூட நான் வந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
235 | பொய்யினைத் தவிர விட்டுப் புறம் அலா அடிமை செய்ய, ஐய! நீ அருளிச் செய்யாய்! ஆதியே! ஆதிமூர்த்தி! வையகம் தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே பைய நின் ஆடல் காண்பான், பரம! நான் வந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
236 | மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே கனைப்பரால்; என் செய்கேனோ? கறை அணி கண்டத்தானே! தினைத்தனை வேதம் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
237 | நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே வஞ்சமே செய்தியாலோ, வானவர் தலைவனே! நீ; மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே அம் சொலாள் காண நின்று, அழக! நீ ஆடும் ஆறே! |
|
உரை
|
|
|
|
|
238 | மண் உண்ட மாலவ(ன்)னும், மலர்மிசை மன்னினானும், விண் உண்ட திரு உரு(வ்)வம் விரும்பினார்-காணமாட்டார்; திண்ணுண்ட திருவே! மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே பண்ணுண்ட பாடலோடும், பரம! நீ ஆடும் ஆறே! |
|
உரை
|
|
|
|