தொடக்கம் |
|
|
4.25 திருஅதிகைவீரட்டானம் திருநேரிசை |
249 | வெண் நிலா மதியம் தன்னை விரிசடை மேவ வைத்து(வ்) உள்-நிலாப் புகுந்து நின்று, அங்கு உணர்வினுக்கு உணரக் கூறி, விண் இலார்; மீயச்சூரார்; வேண்டுவார் வேண்டுவார்க்கே அண்ணியார்; பெரிதும் சேயார்-அதிகை வீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
250 | பாடினார், மறைகள் நான்கும்; பாய் இருள், புகுந்து என் உள்ளம் கூடினார்; கூடல் ஆலவாயிலார்; நல்ல கொன்றை சூடினார்; சூடல் மேவிச் சூழ் சுடர் சுடலை வெண் நீறு- ஆடினார்; ஆடல் மேவி;-அதிகைவீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
251 | ஊனையே கழிக்க வேண்டில் உணர்மின்கள், உள்ளத்து தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற ஏனைய பலவும் ஆகி, இமையவர் ஏத்த நின்று(வ்) ஆனையின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
252 | துருத்தி ஆம் குரம்பைதன்னில்-தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று, “விருத்தி தான் தருக!” என்று வேதனை பலவும் செய்ய, வருத்தியால்; வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற அருத்தியார்க்கு அன்பர் போலும்-அதிகை வீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
253 | பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள் துத்திஐந்தலையநாகம் சூழ் சடைமுடி மேல் வைத்து (வ்), உத்தர மலையர் பாவை உமையவள் நடுங்க அன்று(வ்) அத்தியின் உரிவை போர்த்தார்-அதிகைவீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
254 | வரிமுரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும், -நெஞ்சே!- கரி உரி மூடவல்ல கடவுளைக் காலத்தாலே; சுரிபுரிவிரிகுழ(ல்) லாள், துடி இடைப் பரவை அல்குல் அரிவை, ஒர் பாகர்போலும்- அதிகை வீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
255 | நீதியால் நினைசெய்,-நெஞ்சே!-நிமலனை, நித்தம் ஆக; பாதி ஆம் உமை தன்னோடும் பாகம் ஆய் நின்ற எந்தை, சோதியா சுடர் விளக்கு ஆய்ச் சுண்ண வெண் நீறு அது ஆடி ஆதியும் ஈறும் ஆனார்-அதிகைவீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
256 | எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து புல்லிய மனத்துக் கோயில் புக்கனர்; காமன் என்னும் வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார் அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
257 | ஒன்றவே உணர்திர் ஆகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும், வென்ற ஐம்புலன்கள்தம்மை விலக்குதற்கு உரியீர் எல்லாம்; நன் தவ நாரண(ன்) னும் நான்முகன் நாடிக் காண்குற்று அன்று அவர்க்கு அரியர்போலும்- அதிகைவீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
258 | தடக்கையால் எடுத்து வைத்துத் தடவரை குலுங்க ஆர்த்துக் கிடக்கையால் இடர்கள் ஓங்கக் கிளர் மணி முடிகள் சாய முடக்கினார், திருவிரல்தான்; முருகு அமர்கோதை பாகத்து அடக்கினார்-என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|