தொடக்கம் |
|
|
4.26 திருஅதிகைவீரட்டானம் திருநேரிசை |
259 | “நம்பனே! எங்கள் கோவே! நாதனே! ஆதிமூர்த்தி! பங்கனே! பரமயோகி!” என்று என்றே பரவி நாளும், செம்பொனே! பவளக்குன்றே! திகழ் மலர்ப்பாதம் காண்பான், அன்பனே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே! |
|
உரை
|
|
|
|
|
260 | பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ மெய்யனாய் வாழமாட்டேன்; வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார் செய்யதாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான், ஐய! நான் அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே! |
|
உரை
|
|
|
|
|
261 | நீதியால்வாழ மாட்டேன், நித்தலும்; தூயேன் அல்லேன்; ஓதியும் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்கமாட்டேன்; சோதியே! சுடரே! உன் தன் தூ மலர்ப்பாதம் காண்பான், ஆதியே! அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே! |
|
உரை
|
|
|
|
|
262 | தெருளுமா தெருள மாட்டேன்; தீவினைச் சுற்றம் என்னும் பொருளுளே அழுந்தி, நாளும், போவது ஓர் நெறியும் காணேன்; இருளும் மா மணிகண்டா! நின் இணை அடி இரண்டும் காண்பான் அருளும் ஆறு அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே! |
|
உரை
|
|
|
|
|
263 | அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று, அதனுள் வாழும் அஞ்சினால் அடர்க்கப்பட்டு, இங்கு உழிதரும் ஆதனேனை, அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்ந்தேன் அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே! |
|
உரை
|
|
|
|
|
264 | உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி, மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும், நெஞ்சம்; பெறு கயிறு ஊசல் போலப் பிறை புல்கு சடையாய்! பாதத்து அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே! |
|
உரை
|
|
|
|
|
265 | கழித்திலேன்; காமவெந்நோய்; காதன்மை என்னும் பாசம் ஒழித்திலேன்; ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து விழித்திலேன்; வெளிறு தோன்ற வினை எனும் சரக்குக் கொண்டேன்; அழித்திலேன்; அயர்த்துப் போனேன் அதிகை வீரட்டனீரே! |
|
உரை
|
|
|
|
|
266 | மன்றத்துப் புன்னை போல மரம் படு துயரம் எய்தி, ஒன்றினால் உணரமாட்டேன்; உன்னை உள் வைக்க மாட்டேன்; கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்பதற்கே அன்றினான்; அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே! |
|
உரை
|
|
|
|
|
267 | பிணி விடா ஆக்கை பெற்றேன்; பெற்றம் ஒன்று ஏறுவானே! பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன்; துணிவு இலேன்; யன் அல்லேன்; தூ மலர்ப்பாதம் காண்பான் அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீரட்டனீரே! |
|
உரை
|
|
|
|
|
268 | திருவினாள் கொழுநனாரும், திசைமுகம் உடைய கோவும், இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா ஒருவனே! எம்பிரானே! உன் திருப்பாதம் கண்பான், அருவனே! அருளவேண்டும்- அதிகைவீரட்டனீரே! |
|
உரை
|
|
|
|