தொடக்கம் |
|
|
4.27 திருஅதிகைவீரட்டானம் திருநேரிசை |
269 | மடக்கினார்; புலியின்தோலை; மா மணி நாகம் கச்சா முடக்கினார்; முகிழ் வெண்திங்கள் மொய்சடைக் கற்றை தன் மேல்- தொடக்கினார்; தொண்டைச் செவ்வாய்த் துடி இடைப் பரவை அல்குல் அடக்கினார்-கெடில வேலி அதிகைவீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
270 | சூடினார், கங்கையாளை; சூடிய துழனி கேட்டு அங்கு ஊடினாள், நங்கையாளும்; ஊடலை ஒழிக்க வேண்டிப் பாடினார், சாமவேதம்; பாடிய பாணியாலே ஆடினார்-கெடில வேலி அதிகைவீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
271 | கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல நீர்மை நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார் வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த அம்பினார்- கெடில வேலி அதிகைவீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
272 | மறி படக் கிடந்த கையர், வளர் இள மங்கை பாகம் செறி படக் கிடந்த செக்கர்ச் செழு மதிக்கொழுந்து சூடி, பொறி படக் கிடந்த நாகம் புகை உமிழ்ந்துஅழல வீக்கி, கிறிபட நடப்பர்போலும்-கெடில வீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
273 | நரி வரால் கவ்வச் சென்று நல்-தசை இழந்தது ஒத்த, தெரிவரால்,-மால் கொள் சிந்தை,-தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார் வரி வரால் உகளும் தெண் நீர்க் கழனி சூழ் பழன வேலி, அரிவரால் வயல்கள் சூழ்ந்த, அதிகைவீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
274 | புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய், பலா சங்க்கொம்பின் சுள்ளலைச் சுடலை வெண் நீறு அணிந்தவர்-மணி வெள் ஏற்றுத் துள்ளலைப் பாகன் தன்னைத் தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை அள்ளலைக் கடப்பித்து ஆளும் அதிகைவீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
275 | நீறு இட்ட நுதலர்; வேலை நீலம் சேர் கண்டர்; மாதர் கூறு இட்ட மெய்யர் ஆகி, கூறினார், ஆறும் நான்கும்; கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையினுள்ளால் ஆறு இட்டு முடிப்பர்போலும்-அதிகைவீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
276 | காண் இலார் கருத்தில் வாரார்; திருத்தலார்; பொருத்தல் ஆகாா ஏண் இலார்; இறப்பும் இல்லார்; பிறப்பு இலார்; துறக்கல் ஆகார் நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார் ஆண் அலார்; பெண்ணும் அல்லார்-அதிகைவீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|
|
277 | தீர்த்தம் ஆம் மலையை நோக்கிச் செரு வலி அரக்கன் சென்று பேர்த்தலும், பேதை அஞ்ச, பெருவிரல் அதனை ஊன்றி, சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து, அவனை அன்று(வ்) ஆர்த்த வாய் அலற வைத்தார்-அதிகைவீரட்டனாரே. |
|
உரை
|
|
|
|