தொடக்கம் |
|
|
4.29 திருச்செம்பொன்பள்ளி திருநேரிசை |
284 | ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி, வானினுள் வானவர்க்கும் அறியல் ஆகாத வஞ்சர்; நான் எனில்-தானே என்னும் ஞானத்தார்; பத்தர் நெஞ்சுள் தேனும் இன் அமுதும் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே |
|
உரை
|
|
|
|
|
285 | நொய்யவர்; விழுமியாரும்; நூலின் நுண்நெறியைக் காட்டும் மெய்யவர்; பொய்யும் இல்லார்; உடல் எனும் இடிஞ்சில் தன்னில் நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகிச் செய்யவர்; கரிய கண்டர்-திருச் செம்பொன்பள்ளியாரே. |
|
உரை
|
|
|
|
|
286 | வெள்ளியர்; கரியர்;செய்யர்; விண்ணவர் அவர்கள் நெஞ்சுள் ஒள்ளியர்; ஊழி ஊழி உலகம் அது ஏத்த நின்ற பள்ளியர்; நெஞ்சத்து உள்ளார்; பஞ்சமம் பாடி ஆடும் தெள்ளியர்; கள்ளம் தீர்ப்பார்-திருச் செம்பொன்பள்ளியாரே. |
|
உரை
|
|
|
|
|
287 | தந்தையும் தாயும் ஆகித் தானவன்; ஞானமூர்த்தி; முந்திய தேவர் கூடி முறை முறை இருக்குச் சொல்லி, “எந்தை, நீ சரணம்!” என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச் சிந்தையுள் சிவம் அது ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே. |
|
உரை
|
|
|
|
|
288 | ஆறு உடைச் சடையர் போலும்; அன்பருக்கு அன்பர் போலும்; கூறு உடை மெய்யர்போலும்; கோள் அரவு அரையர்போலும்; நீறு உடை அழகர்போலும்-நெய்தலே கமழும் நீர்மைச் சேறு உடை கமல வேலித் திருச் செம்பொன்பள்ளியாரே. |
|
உரை
|
|
|
|
|
289 | ஞாலமும் அறிய வேண்டின்,”நன்று” என வாழல் உற்றீர் காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழிய கில்லீர் கோலமும் வேண்டா; ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில் சீலமும் நோன்பும் ஆவார், திருச் செம்பொன்பள்ளியாரே. |
|
உரை
|
|
|
|
|
290 | புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும்; எரி, காலே, மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும்; தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று திரிகாலம் கண்ட எந்தை-திருச் செம்பொன்பள்ளியாரே. |
|
உரை
|
|
|
|
|
291 | கார் உடைக் கொன்றைமாலை கதிர் மதி அரவினோடும் நீர் உடைச் சடையுள் வைத்த நீதியார்; நீதி உள்ள பாரொடு விண்ணும், மண்ணும், பதினெட்டுக் கணங்கள், ஏத்தச் சீரொடு பாடல் ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே. |
|
உரை
|
|
|
|
|
292 | ஓவாத மறைவல்லானும், ஓத நீர்வண்ணன், காணா மூவாத பிறப்பு இலாரும்; முனிகள் ஆனார்கள் ஏத்தும் பூ ஆன மூன்று முந்நூற்று அறுபதும் ஆகும் எந்தை; தேவாதிதேவர், என்றும்,-திருச் செம்பொன்பள்ளியாரே. |
|
உரை
|
|
|
|
|
293 | அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச் செய்து சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான் அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும், செங்கண் வெள் ஏறு அது ஏறும்-திருச் செம்பொன்பள்ளியாரே. |
|
உரை
|
|
|
|