தொடக்கம் |
|
|
4.30 திருக்கழிப்பாலை திருநேரிசை |
294 | நங்கையைப் பாகம் வைத்தார்; ஞானத்தை நவில வைத்தார் அங்கையில் அனலும் வைத்தார்; ஆனையின் உரிவை வைத்தார் தம் கையின் யாழும் வைத்தார்; தாமரை மலரும் வைத்தார் கங்கையைச் சடையுள் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. |
|
உரை
|
|
|
|
|
295 | விண்ணினை விரும்ப வைத்தார்; வேள்வியை வேட்க வைத்தார் பண்ணினைப் பாட வைத்தார்; பத்தர்கள் பயில வைத்தார் மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார் கண்ணினை நெற்றி வைத்தார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே. |
|
உரை
|
|
|
|
|
296 | வாமனை வணங்க வைத்தார்; வாயினை வாழ்த்த வைத்தார் சோமனைச் சடை மேல் வைத்தார்; சோதியுள் சோதி வைத்தார் ஆ மன் நெய் ஆட வைத்தார்; அன்பு எனும் பாசம் வைத்தார் காமனைக் காய்ந்த கண்ணார்- கழிப்பாலைச் சேர்ப்பனாரே. |
|
உரை
|
|
|
|
|
297 | அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார் பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழலுண்ண வைத்தார் பரிய தீ வண்ணர் ஆகிப் பவளம் போல் நிறத்தை வைத்தார் கரியது ஓர் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. |
|
உரை
|
|
|
|
|
298 | கூர் இருள் கிழிய நின்ற கொடு மழுக் கையில் வைத்தார் பேர் இருள் கழிய மல்கு பிறை, புனல், சடையுள் வைத்தார் ஆர் இருள் அண்டம் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார் கார் இருள் கண்டம் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. |
|
உரை
|
|
|
|
|
299 | உள்-தங்கு சிந்தை வைத்தார்; உள்குவார்க்கு உள்ளம் வைத்தார் விண்-தங்கு வேள்வி வைத்தார்; வெந்துயர் தீரவைத்தார் நள்- தங்கு நடமும் வைத்தார்; ஞானமும் நாவில் வைத்தார் கட்டங்கம் தோள் மேல் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. |
|
உரை
|
|
|
|
|
300 | ஊனப் பேர் ஒழிய வைத்தார்; ஓதியே உணர வைத்தார் ஞானப் பேர் நவில வைத்தார்; ஞானமும் நடுவும் வைத்தார் வானப்பேர் ஆறும் வைத்தார்; வைகுந்தற்கு ஆழி வைத்தார் கானப்பேர் காதல் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. |
|
உரை
|
|
|
|
|
301 | கொங்கினும் அரும்பு வைத்தார்; கூற்றங்கள் கெடுக்க வைத்தார் சங்கினுள் முத்தம் வைத்தார்; சாம்பலும் பூச வைத்தார் அங்கமும் வேதம் வைத்தார்; ஆலமும் உண்டு வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. |
|
உரை
|
|
|
|
|
302 | சதுர் முகன் தானும் மாலும் தம்மிலே இகலக் கண்டு(வ்) எதிர் முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் பிதிர் முகன் காலன் தன்னைக் கால்தனில் பிதிர வைத்தார் கதிர் முகம் சடையில் வைத்தார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. |
|
உரை
|
|
|
|
|
303 | மாலினாள் நங்கை அஞ்ச, மதில் இலங்கைக்கு மன்னன் வேலினான் வெகுண்டு எடுக்கக் காண்டலும், வேத நாவன் நூலினான் நோக்கி நக்கு, நொடிப்பது ஓர் அளவில் வீழ, காலினால் ஊன்றியிட்டார்-கழிப்பாலைச் சேர்ப்பனாரே. |
|
உரை
|
|
|
|