தொடக்கம் |
|
|
4.36 திருப்பழனம் திருநேரிசை |
354 | ஆடினார் ஒருவர் போலும்; அலர் கமழ் குழலினாளைக் கூடினார் ஒருவர் போலும்; குளிர்புனல், வளைந்த திங்கள் சூடினார் ஒருவர் போலும்; தூய நல்மறைகள் நான்கும் பாடினார் ஒருவர் போலும்;-பழனத்து எம் பரமனாரே. |
|
உரை
|
|
|
|
|
355 | போவது ஓர் நெறியும் ஆனார்; புரிசடைப் புனிதனார்;-நான் வேவது ஓர் வினையில் பட்டு வெம்மை தான் விடவும் கில்லேன்; கூவல்தான் அவர்கள் கேளார்-குணம் இலா ஐவர் செய்யும் பாவமே தீர நின்றார்-பழனத்து எம் பரமனாரே. |
|
உரை
|
|
|
|
|
356 | கண்டராய், முண்டர் ஆகி, கையில் ஓர் கபாலம் ஏந்தி, தொண்டர்கள் பாடி ஆடித் தொழு கழல் பரமனார்தாம் விண்டவர் புரங்கள் எய்த வேதியர்; வேத நாவர் பண்டை என் வினைகள் தீர்ப்பார்-பழனத்து எம் பரமனாரே |
|
உரை
|
|
|
|
|
357 | நீர் அவன்; தீயினோடு நிழல் அவன்; எழிலது ஆய பார் அவன்; விண்ணின் மிக்க பரம் அவன்; பரமயோகி; ஆரவன்; அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகிப் பார் அகத்து அமுதம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே. |
|
உரை
|
|
|
|
|
358 | ஊழியார்; ஊழிதோறும் உலகினுக்கு ஒருவர் ஆகிப் பாழியார்; பாவம் தீர்க்கும் பராபரர்; பரம் அது ஆய, ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்ப(அ) ரீய, பாழியார்-பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே. |
|
உரை
|
|
|
|
|
359 | ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகி நின்று, காலின் கீழ்க் காலன் தன்னைக் கடுகத் தான் பாய்ந்து, பின்னும் பாலின் கீழ் நெய்யும் ஆனார்-பழனத்து எம் பரமனாரே. |
|
உரை
|
|
|
|
|
360 | ஆதித்தன், அங்கி, சோமன், அயனொடு, மால், புத(ன்)னும், போதித்து நின்று உல(ஃ)கில் போற்று இசைத்தார்; இவர்கள் சோதித்தார்; ஏழு உல(ஃ)கும் சோதியுள்சோதி ஆகிப் பாதிப் பெண் உருவம் ஆனார்-பழனத்து எம் பரமனாரே. |
|
உரை
|
|
|
|
|
361 | கால்-தனால் காலற் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர் தோற்றனார், கடலுள் நஞ்சை; தோடு உடைக் காதர்; சோதி ஏற்றினார் இளவெண்திங்கள், இரும் பொழில் சூழ்ந்த காயம்; பாற்றினார், வினைகள் எல்லாம்;-பழனத்து எம் பரமனாரே. |
|
உரை
|
|
|
|
|
362 | கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே எண்ணியும் துதித்தும் ஏத்த, எரி உரு ஆகி நின்று, வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப் பண் உலாம் பாடல் கேட்டார்-பழனத்து எம் பரமனாரே. |
|
உரை
|
|
|
|
|
363 | குடை உடை அரக்கன் சென்று, குளிர் கயிலாய வெற்பின் இடை மட வரலை அஞ்ச, எடுத்தலும், இறைவன் நோக்கி விடை உடை விகிர்தன் தானும் விரலினால் ஊன்றி மீண்டும் படை கொடை அடிகள்போலும்- பழனத்து எம் பரமனாரே. |
|
உரை
|
|
|
|