தொடக்கம் |
|
|
4.37 திருநெய்த்தானம் திருநேரிசை |
364 | காலனை வீழச் செற்ற கழல் அடி இரண்டும் வந்து என் மேல ஆய் இருக்கப் பெற்றேன்; மேதகத் தோன்றுகின்ற கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய நீலம் வைத்த(அ)னைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே. |
|
உரை
|
|
|
|
|
365 | காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி, தூபமும் தீபம் காட்டித் தொழுமவர்க்கு அருள்கள் செய்து, சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வு உற நினைந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
366 | பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை தன்னை உறைதர வைத்த எங்கள் உத்தமன்; ஊழிஆய நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று குறைதரும் அடியவர்க்குக் குழகனைக் கூடல் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
367 | வடி தரு மழு ஒன்று ஏந்தி, வார்சடை மதியம் வைத்து பொடி தரு மேனிமேலே புரிதரு நூலர் போலும்- நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி, அடி தரு கழல்கள் ஆர்ப்ப, ஆடும் எம் அண்ணலாரே. |
|
உரை
|
|
|
|
|
368 | காடு இடம் ஆக நின்று, கனல்- எரி கையில் ஏந்தி, பாடிய பூதம் சூழ, பண் உடன் பலவும் சொல்லி ஆடிய கழலர், சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் கூடிய குழகனாரைக் கூடும் ஆறு அறிகிலேனே! |
|
உரை
|
|
|
|
|
369 | வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ, தான் அவர்க்கு அருள்கள் செய்யும் சங்கரன்; செங்கண் ஏற்றன்; தேன் அமர் பொழில்கள் சூழத் திகழும் நெய்த்தானம் மேய கூன் இளமதியினானைக் கூடும் ஆறு அறிகிலேனே! |
|
உரை
|
|
|
|
|
370 | கால் அதிர்கழல்கள் ஆர்ப்ப, கனல்-எரி கையில் வீசி, ஞாலமும் குழிய நின்று, நட்டம் அது ஆடுகின்ற மேலவர்-முகடு தோய விரிசடை திசைகள் பாய மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே. |
|
உரை
|
|
|
|
|
371 | பந்தித்த சடையின் மேலே பாய்புனல் அதனை வைத்து அந்திப்போது அனலும் ஆடி, அடிகள், ஐயாறு புக்கார் வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள் சிந்திப்பார் சிந்தை உள்ளார்-திருந்து நெய்த்தானனாரே. |
|
உரை
|
|
|
|
|
372 | சோதி ஆய்ச் சுடரும் ஆனார்; சுண்ணவெண்சாந்து பூசி ஓதி வாய் உலகம் ஏத்த, உகந்து தாம் அருள்கள் செய்வார் ஆதி ஆய் அந்தம் ஆனார்-யாவரும் இறைஞ்சி ஏத்த, நீதி ஆய் நியமம் ஆகி, நின்ற நெய்த்தானனாரே. |
|
உரை
|
|
|
|
|
373 | இலை உடைப்படை கை ஏந்தும் இலங்கையர் மன்னன் தன்னைத் தலைஉடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து, சிலை உடன் கணையைச் சேர்த்து, திரிபுரம் எரியச் செற்ற நிலை உடை அடிகள் போலும்-நின்ற நெய்த்தானனாரே. |
|
உரை
|
|
|
|