தொடக்கம் |
|
|
4.38 திருஐயாறு திருநேரிசை |
374 | கங்கையைச் சடையுள் வைத்தார்; கதிர்ப் பொறி அரவும் வைத்தார் திங்களைத் திகழ வைத்தார்; திசை திசை தொழவும் வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார்; மான்மறி, மழுவும், வைத்தார் அங்கையுள் அனலும் வைத்தார்;-ஐயன் ஐயாறனாரே. |
|
உரை
|
|
|
|
|
375 | பொடிதனைப் பூச வைத்தார்; பொங்கு வெண் நூலும் வைத்தார் கடியது ஓர் நாகம் வைத்தார்; காலனைக் கால் அவைத்தார் வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகம் வைத்தார் அடி இணை தொழவும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே. |
|
உரை
|
|
|
|
|
376 | உடை தரு கீளும் வைத்தார்; உலகங்கள் அனைத்தும் வைத்தார் படை தரு மழுவும் வைத்தார்; பாய் புலித்தோலும் வைத்தார் விடை தரு கொடியும் வைத்தார்; வெண் புரி நூலும் வைத்தார் அடை தர அருளும் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே. |
|
உரை
|
|
|
|
|
377 | தொண்டர்கள் தொழவும் வைத்தார்; தூ மதி சடையில் வைத்தார் இண்டையைத் திகழ வைத்தார்; எமக்கு என்றும் இன்பம் வைத்தார் வண்டு சேர் குழலினாளை மருவி ஓர் பாகம் வைத்தார் அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே. |
|
உரை
|
|
|
|
|
378 | வானவர் வணங்க வைத்தார்; வல்வினை மாய வைத்தார் கான் இடை நடமும் வைத்தார்; காமனைக் கனலா வைத்தார் ஆன் இடை ஐந்தும் வைத்தார்; ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார்- ஐயன் ஐயாறனாரே. |
|
உரை
|
|
|
|
|
379 | சங்கு அணி குழையும் வைத்தார்; சாம்பர் மெய்ப் பூச வைத்தார் வெங்கதிர் எரிய வைத்தார்; விரி பொழில் அனைத்தும் வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார்; கடுவினை களைய வைத்தார் அங்கம் அது ஓத வைத்தார்- ஐயன் ஐயாறனாரே. |
|
உரை
|
|
|
|
|
380 | பத்தர்கட்கு அருளும் வைத்தார்; பாய் விடை ஏற வைத்தார் சித்தத்தை ஒன்ற வைத்தார்; சிவம் அதே நினைய வைத்தார் முத்தியை முற்ற வைத்தார்; முறை முறை நெறிகள் வைத்தார் அத்தியின் உரிவை வைத்தார்; -ஐயன் ஐயாறனாரே. |
|
உரை
|
|
|
|
|
381 | ஏறு உகந்து ஏற வைத்தார்; இடை மருது இடமும் வைத்தார் நாறு பூங்கொன்றை வைத்தார்; நாகமும் அரையில் வைத்தார் கூறு உமை ஆகம் வைத்தார்; கொல் புலித் தோலும் வைத்தார் ஆறும் ஓர் சடையில் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே. |
|
உரை
|
|
|
|
|
382 | பூதங்கள் பலவும் வைத்தார்; பொங்கு வெண்நீறும் வைத்தார் கீதங்கள் பாட வைத்தார்; கின்னரம் தன்னை வைத்தார் பாதங்கள் பரவ வைத்தார்; பத்தர்கள் பணிய வைத்தார் ஆதியும் அந்தம் வைத்தார்-ஐயன் ஐயாறனாரே. |
|
உரை
|
|
|
|
|
383 | இரப்பவர்க்கு ஈய வைத்தார்; ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பவர் தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார் பரப்பு நீர்க் கங்கை தன்னைப் படர் சடைப் பாகம் வைத்தார் அரக்கனுக்கு அருளும் வைத்தார்- ஐயன் ஐயாறனாரே. |
|
உரை
|
|
|
|