தொடக்கம் |
|
|
4.41 திருச்சோற்றுத்துறை திருநேரிசை |
404 | பொய் விராம் மேனி தன்னைப் பொருள் எனக் காலம் போக்கி மெய் விராம் மனத்தன் அல்லேன்; வேதியா! வேத நாவா! ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப் போனேன் செய் வரால் உகளும் செம்மைத் திருச் சோற்றுத் துறையனாரே! |
|
உரை
|
|
|
|
|
405 | கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா; எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை- அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடிச் சிட்டராய் அருள்கள் செய்வார், திருச் சோற்றுத் துறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
406 | கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளைக் காதலாலே எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும்! பல் இல் வெண்தலை கை ஏந்திப் பல் இலம் திரியும் செல்வர் சொல்லும் நன்பொருளும் ஆவார்-திருச் சோற்றுத் துறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
407 | கறையராய்க் கண்டம், நெற்றிக் கண்ணராய், பெண் ஓர் பாகம் இறையராய், இனியர் ஆகி, தனியராய், பனி வெண் திங்கள்- பிறையராய், செய்த எல்லாம் பீடராய், கேடு இல் சோற்றுத்- துறையராய், புகுந்து என் உள்ளச் சோர்வு கண்டு அருளினாரே. |
|
உரை
|
|
|
|
|
408 | பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்; “எந்தையே! ஏகமூர்த்தி!” என்று நின்று ஏத்தமாட்டேன்; பந்தம் ஆய், வீடும் ஆகி, பரம்பரம் ஆகி, நின்று சிந்தையுள்-தேறல் போலும்-திருச் சோற்றுத் துறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
409 | பேர்த்து இனிப் பிறவா வண்ணம் பிதற்று மின், பேதை பங்கன் பார்த்தனுக்கு அருள்கள் செய்த பாசுபதன் திற(ம்)மே! ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்றுத் தீர்த்தம் ஆய்ப் போத விட்டார், திருச் சோற்றுத் துறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
410 | கொந்து ஆர் பூங் குழலினாரைக் கூறியே காலம் போன, எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது; அந்தோ! முந்து அரா அல் குலாளை உடன் வைத்த ஆதிமூர்த்தி, செந் தாது புடைகள் சூழ்ந்த திருச் சோற்றுத் துறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
411 | அம் கதிரோன் அவ(ன்)னை அண்ணலாக் கருத வேண்டா; வெங் கதிரோன் வழீயே போவதற்கு அமைந்து கொண் மின்! அம் கதிரோன் அவ(ன்)னை உடன் வைத்த ஆதிமூர்த்தி- செங் கதிரோன் வணங்கும் திருச் சோற்றுத் துறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
412 | ஓதியே கழிக்கின்றீர்கள்; -உலகத்தீர்!-ஒருவன் தன்னை நீதியால் நினைக்க மாட்டீர்; நின்மலன் என்று சொல்லீர் சாதியா நான் முக(ன்)னும் சக்கரத்தானும் காணாச் சோதி ஆய்ச் சுடர் அது ஆனார்-திருச் சோற்றுத் துறையனாரே. |
|
உரை
|
|
|
|
|
413 | மற்று நீர் மனம் வையாதே மறுமையைக் கழிக்க வேண்டில் பெற்றது ஓர் உபாயம் தன்னால் பிரானையே பிதற்று மின்கள்! கற்று வந்து அரக்கன் ஓடிக் கயிலாய மலை எடுக்க, செற்று உகந்து அருளிச் செய்தார்-திருச் சோற்றுத் துறையனாரே. |
|
உரை
|
|
|
|