தொடக்கம் |
|
|
4.42 திருத்துருத்தி திருநேரிசை |
414 | பொருத்திய குரம்பை தன்னைப் பொருள் எனக் கருத வேண்டா; இருத்தி எப்போதும் நெஞ்சுள், இறைவனை, ஏத்து மின்கள்! ஒருத்தியைப் பாகம் வைத்து அங்கு ஒருத்தியைச் சடையில் வைத்த துருத்தி அம் சுடரினானைத் தொண்டனேன் கண்டஆறே! |
|
உரை
|
|
|
|
|
415 | சவை தனைச் செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற இவை ஒரு பொருளும் அல்ல; இறைவனை ஏத்து மி(ன்)னோ! அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச் செய்த சுவையினை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே! |
|
உரை
|
|
|
|
|
416 | உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து மி(ன்)னோ! கன்னியை ஒரு பால் வைத்து, கங்கையைச் சடையுள் வைத்து, பொன்னியின் நடுவு தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தியானைத் தொண்டனேன் கண்ட ஆறே.! |
|
உரை
|
|
|
|
|
417 | ஊன் தலை வலியன் ஆகி, உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் தான் தலைப்பட்டு நின்று, சார் கனல் அகத்து வீழ, வான் தலைத் தேவர் கூடி,”வானவர்க்கு இறைவா!” என்னும் தோன்றலை, துருத்தியானை தொண்டனேன் கண்டஆறே! |
|
உரை
|
|
|
|
|
418 | உடல் தனைக் கழிக்கல் உற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் இடர் தனைக் கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து மி(ன்)னோ! கடல் தனில் நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற சுடர் தனை துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே! |
|
உரை
|
|
|
|
|
419 | அள்ளலைக் கடக்க வேண்டில் அரனையே நினை மின், நீர்கள் பொள்ளல் இக்காயம் தன்னுள் புண்டரீகத்து இருந்த வள்ளலை, வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற துள் அலைத் துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே! |
|
உரை
|
|
|
|
|
420 | “பாதியில் உமையாள் தன்னைப் பாகமா வைத்த பண்பன்; வேதியன்” என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்தச் சாதி ஆம் சதுமுக(ந்)னும் சக்கரத்தானும் காணாச் சோதியை, துருத்தியானை, தொண்டனேன் கண்டஆறே! |
|
உரை
|
|
|
|
|
421 | சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்த வேண்டா; தூமம் நல் அகிலும் காட்டித் தொழுது அடி வணங்குமி(ந்)னோ! சோமனைச் சடையுள் வைத்துத் தொல்-நெறி பலவும் காட்டும் தூ மணல்-துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே! |
|
உரை
|
|
|
|
|
422 | குண்டரே, சமணர் புத்தர்; குறி அறியாது நின்று கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழிமின், நீர்கள்! விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள் செய்த தொண்டர்கள் துணையினானைத் துருத்தி நான் கண்டஆறே! |
|
உரை
|
|
|
|
|
423 | பிண்டத்தைக் கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று மின்கள் அண்டத்தைக் கழிய நீண்ட அடல் அரக்கன் தன் ஆண்மை கண்டு ஒத்துக் கால் விர(ல்)லால் ஊன்றி, மீண்டும் அருளிச்செய்த துண்டத்துத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டஆறே! |
|
உரை
|
|
|
|