4.47 திருக்கயிலாயம்
திருநேரிசை
456கனகம் மா வயிரம் உந்தும் மா மணிக் கயிலை கண்டு
முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும், உமையாள் அஞ்ச,
அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும், அலறி வீழ்ந்தான்;
மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
உரை
   
457கதித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
அதிர்த்து அவன் எடுத்திட(ல்)லும், அரிவை தான் அஞ்ச, ஈசன்
நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான்;
மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
உரை
   
458கறுத்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால்
மறித்தலும், மங்கை அஞ்ச, வானவர் இறைவன் நக்கு,
நெறித்து ஒரு விரலால் ஊன்ற, நெடுவரை போல வீழ்ந்தான்;
மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
உரை
   
459கடுத்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
எடுத்தலும், மங்கை அஞ்ச, இறையவன் இறையே நக்கு,
நொடிப்பு அளவு(வு) விரலால் ஊன்ற, நோவதும் அலறியிட்டான்;
மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
உரை
   
460கன்றித் தன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி
வென்றித் தன் கைத்தலத்தால் எடுத்தலும், வெருவ மங்கை,
நன்று(த்) தான் நக்கு நாதன் ஊன்றலும், நகழ வீழ்ந்தான்;
மன்றித் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
உரை
   
461களித்தவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி,
நெளித்து அவன் எடுத்திட(ல்)லும், நேரிழை அஞ்ச, நோக்கி,
வெளித்தவன் ஊன்றியிட்ட வெற்பினால் அலறி வீழ்ந்தான்;
மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
உரை
   
462கருத்தனாய்க் கண் சிவந்து, கயிலை நல் மலையைக் கையால்
எருத்தனாய் எடுத்த ஆறே, ஏந்திழை அஞ்ச, ஈசன்
திருத்தனாய் நின்ற தேவன் திருவிரல் ஊன்ற, வீழ்ந்தான்;
வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
உரை
   
463கடியவன் கண் சிவந்து, கயிலை நல் மலையை ஓடி,
வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும், மருவ நோக்கிச்
செடி படத் திருவிர(ல்)லால் ஊன்றலும், சிதைந்து வீழ்ந்தான்;
வடிவு உற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
உரை
   
464கரியத் தான் கண் சிவந்து, கயிலை நல் மலையைப் பற்றி,
இரியத் தான் எடுத்திட(ல்)லும், ஏந்திழை அஞ்ச, ஈசன்
நெரியத் தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது, அலறி வீழ்ந்தான்;
மறியத் தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
உரை
   
465கற்றனன், கயிலை தன்னைக் காண்டலும் அரக்கன் ஓடிச்
செற்றவன் எடுத்த ஆறே, சேயிழை அஞ்ச, ஈசன்
உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால், வீழ்ந்தான்;
மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே!
உரை