தொடக்கம் |
|
|
4.48 திருஆப்பாடி திருநேரிசை |
466 | கடல் அகம் ஏழினோடும் பவனமும் கலந்து, விண்ணும் உடல் அகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று, தடம் மலர்க் கந்த மாலை தண்மதி பகலும் ஆகி, மடல் அவிழ் கொன்றை சூடி, மன்னும்-ஆப்பாடியாரே. |
|
உரை
|
|
|
|
|
467 | ஆதியும் அறிவும் ஆகி, அறிவினுள் செறிவும் ஆகி, சோதியுள் சுடரும் ஆகி, தூநெறிக்கு ஒருவன் ஆகி, பாதியில் பெண்ணும் ஆகி, பரவுவார் பாங்கர் ஆகி, வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும்-ஆப்பாடியாரே. |
|
உரை
|
|
|
|
|
468 | எண் உடை இருக்கும் ஆகி, இருக்கின் உள் பொருளும் ஆகி, பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்கர் ஆகி, கண் ஒரு நெற்றி ஆகி, கருதுவார் கருதல் ஆகாப் பெண் ஒரு பாகம் ஆகி, பேணும்-ஆப்பாடியாரே. |
|
உரை
|
|
|
|
|
469 | அண்டம் ஆர் அமரர் கோமான் -ஆதி, எம் அண்ணல், -பாதம் கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான், தாபரத்தை; கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறியக் கண்டு தண்டியார்க்கு அருள்கள் செய்த தலைவர், ஆப்பாடியாரே. |
|
உரை
|
|
|
|
|
470 | சிந்தையும் தெளிவும் ஆகி, தெளிவினுள் சிவமும் ஆகி, வந்த நன் பயனும் ஆகி, வாணுதல் பாகம் ஆகி, மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித் தென் கரை மேல் மன்னி அந்த மோடு அளவு இலாத அடிகள்-ஆப்பாடியாரே. |
|
உரை
|
|
|
|
|
471 | வன்னி, வாள் அரவு, மத்தம், மதியமும், ஆறும், சூடி, மின்னிய உரு ஆம் சோதி மெய்ப் பொருள் பயனும் ஆகி, கன்னி ஓர் பாகம் ஆகி, கருதுவார் கருத்தும் ஆகி, இன் இசை தொண்டர் பாட, இருந்த ஆப்பாடியாரே. |
|
உரை
|
|
|
|
|
472 | உள்ளும் ஆய்ப் புறமும் ஆகி, உருவும் ஆய் அருவும் ஆகி, வெள்ளம் ஆய்க் கரையும் ஆகி, விரி கதிர் ஞாயிறு ஆகி, கள்ளம் ஆய்க் கள்ளத்து உள்ளார் கருத்தும் ஆய் அருத்தம் ஆகி, அள்ளுவார்க்கு அள்ளல் செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே! |
|
உரை
|
|
|
|
|
473 | மயக்கம் ஆய்த் தெளிவும் ஆகி, மால்வரை வளியும் ஆகி, தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி, சிந்தையுள் ஒன்றி நின்று(வ்) இயக்கம் ஆய், இறுதி ஆகி, எண் திசைக்கு இறைவர் ஆகி, அயக்கம் ஆய் அடக்கம் ஆய ஐயர்-ஆப்பாடியாரே. |
|
உரை
|
|
|
|
|
474 | ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை பேர் ஒளி உருவினானைப் பிரமனும் மாலும் காணாச் சீர் அவை பரவி ஏத்திச் சென்று அடி வணங்குவார்க்குப் பேர் அருள் அருளிச் செய்வார், பேணும் ஆப்பாடியாரே. |
|
உரை
|
|
|
|
|
475 | திண் திறல் அரக்கன் ஓடி, சீ கயிலாயம் தன்னை எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும், ஏழை அஞ்ச, விண்டு இற நெறிய ஊன்றி, மிகக் கடுத்து அலறி வீழ, பண் திறல் கேட்டு உகந்த பரமர்-ஆப்பாடியாரே. |
|
உரை
|
|
|
|