4.50 திருக்குறுக்கைவீரட்டம்
திருநேரிசை
486நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள
அடியொடு முடியும் காணார்; அருச்சுனற்கு அம்பும் வில்லும்
துடி உடை வேடர் ஆகித் தூய மந்திரங்கள் சொல்லிக்
கொடி நெடுந் தேர் கொடுத்தார்-குறுக்கை வீரட்டனாரே.
உரை
   
487ஆத்தம் ஆம் அயனும், மாலும், அன்றி மற்று ஒழிந்த தேவர்
“சோத்தம், எம்பெருமான்!” என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல,
தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும்
கூத்தராய் வீதி போந்தார்-குறுக்கை வீரட்டனாரே.
உரை