தொடக்கம் |
|
|
4.51 திருக்கோடிகா திருநேரிசை |
488 | நெற்றி மேல் கண்ணினானே! நீறு மெய் பூசினானே! கற்றைப் புன் சடையினானே! கடல் விடம் பருகினானே! செற்றவர் புரங்கள் மூன்றும் செவ் அழல் செலுத்தினானே! குற்றம் இல் குணத்தினானே! கோடிகா உடைய கோவே! |
|
உரை
|
|
|
|
|
489 | கடி கமழ் கொன்றையானே! கபாலம் கை ஏந்தினானே! வடிவு உடை மங்கை தன்னை மார்பில் ஓர் பாகத்தானே! அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள் செய்வானே! கொடி அணி விழவு அது ஓவாக் கோடிகா உடைய கோவே! |
|
உரை
|
|
|
|
|
490 | நீறு மெய் பூசினானே! நிழல் திகழ் மழுவினானே! ஏறு உகந்து ஏறினானே! இருங் கடல் அமுது ஒப்பானே! ஆறும் ஓர் நான்கு வேதம்! அறம் உரைத்து அருளினானே! கூறும் ஓர் பெண்ணினானே! கோடிகா உடைய கோவே! |
|
உரை
|
|
|
|
|
491 | காலனைக் காலால் செற்று, அன்று, அருள் புரி கருணையானே! நீலம் ஆர் கண்டத்தானே! நீள் முடி அமரர்கோவே! ஞாலம் ஆம் பெருமையானே! நளிர் இளந்திங்கள் சூடும் கோலம் ஆர் சடையினானே! கோடிகா உடைய கோவே! |
|
உரை
|
|
|
|
|
492 | பூண் அரவு ஆரத்தானே! புலி உரி அரையினானே! காணில் வெண் கோவண(ம்) மும், கையில் ஓர் கபாலம் ஏந்தி, ஊணும் ஊர்ப் பிச்சையானே! உமை ஒரு பாகத்தானே! கோணல் வெண் பிறையினானே! கோடிகா உடைய கோவே! |
|
உரை
|
|
|
|
|
493 | கேழல் வெண் கொம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே! ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன்? எந்தை பெம்மான்! மாழை ஒண்கண்ணினார்கள் வலை தனில் மயங்குகின்றேன்; கூழை ஏறு உடைய செல்வா! கோடிகா உடைய கோவே! |
|
உரை
|
|
|
|
|
494 | அழல் உமிழ் அங்கையானே! அரிவை ஓர் பாகத்தானே! தழல் உமிழ் அரவம் ஆர்த்துத் தலை தனில் பலி கொள்வானே! நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள் குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே! |
|
உரை
|
|
|
|
|
495 | ஏ அடு சிலையினாலே புரம் அவை எரி செய்தானே! மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே! ஆவடு துறை உளானே! ஐவரால் ஆட்டப் பட்டேன்! கோ அடு குற்றம் தீராய், கோடிகா உடைய கோவே! |
|
உரை
|
|
|
|
|
496 | ஏற்ற நீர்க் கங்கையானே! இரு நிலம் தாவினானும், நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன், இவர்கள் கூடி ஆற்றலால் அளக்கல் உற்றார்க்கு அழல் உரு ஆயினானே! கூற்றுக்கும் கூற்று அது ஆனாய்! கோடிகா உடைய கோவே! |
|
உரை
|
|
|
|
|
497 | பழக நான் அடிமை செய்வேன்-பசுபதீ! பாவ நாசா! மழ களியானையின் தோல் மலைமகள் வெருவப் போர்த்த அழகனே! அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும் குழகனே! கோல மார்பா! கோடிகா உடைய கோவே! |
|
உரை
|
|
|
|