தொடக்கம் |
|
|
4.53 திருஆரூர் திருநேரிசை |
508 | குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல் கண்ணி தன்னைக் கழல் வலம் கொண்டு நீங்காக் கணங்கள்; அக் கணங்கள் ஆர அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர் தொழல், வலம் கொண்டல், செய்வான் தோன்றினார் தோன்றினாரே. |
|
உரை
|
|
|
|
|
509 | நாகத்தை நங்கை அஞ்ச; நங்கையை மஞ்ஞை என்று வேகத்தைத் தவிர, நாகம்; வேழத்தின் உரிவை போர்த்துப் பாகத்தின் நிமிர்தல் செய்யாத் திங்களை மின் என்று அஞ்சி ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும், ஆரூரனார்க்கே. |
|
உரை
|
|
|
|
|
510 | தொழுது அகம் குழைய மேவித் தொட்டிமை உடைய தொண்டர் அழுத(அ)அகம் புகுந்து நின்றார், அவர் அவாப் போலும்-ஆரூர் எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும், ஏர் கொள் வேலிப் பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே. |
|
உரை
|
|
|
|
|
511 | நஞ்சு இருள் மணி கொள் கண்டர்; நகை இருள் ஈமக் கங்குல் வெஞ்சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா வெஞ்சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே. |
|
உரை
|
|
|
|
|
512 | “எம் தளிர் நீர்மை கோல மேனி” என்று இமையோர் ஏத்த, பைந்தளிர்க் கொம்பர் அன்ன படர்கொடி பயிலப் பட்டு, தம் சடைத் தொத்தினாலும் த(ம்)மது ஓர் நீர்மையாலும் அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே. |
|
உரை
|
|
|
|
|
513 | வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடித் தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும், ஊன் அகம் கழிந்த ஓட்டில்; உண்பதும், ஒளி கொள் நஞ்சம்- ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே. |
|
உரை
|
|
|
|
|
514 | அஞ்சு அணை கணையினானை அழல் உற அன்று நோக்கி, அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு(வ்), அஞ்சு அணை அஞ்சும் ஆடி, ஆடு அரவு ஆட்டுவார் தாம், அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம் கொண்டாரே. |
|
உரை
|
|
|
|
|
515 | வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீரப் பிணங்கு உடைச் சடையில் வைத்த பிறை உடைப் பெருமை அண்ணல், மணம் கமழோதி பாகர்-மதி நிலா வட்டத்து ஆடி அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே. |
|
உரை
|
|
|
|
|
516 | நகல் இடம் பிறர்கட்கு ஆக, நால்மறையோர்கள் தங்கள் புகல் இடம் ஆகி வாழும் புகல் இலி-இருவர் கூடி இகல் இடம் ஆக, நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி, அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே. |
|
உரை
|
|
|
|
|
517 | ஆயிரம் திங்கள் மொய்த்த அலைகடல் அமுதம் வாங்கி, ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ ஆயிரம் தோளும் மட்டித்து, ஆடிய அசைவு தீர, ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே. |
|
உரை
|
|
|
|