தொடக்கம் |
|
|
4.54 திருப்புகலூர் திருநேரிசை |
518 | பகைத்திட்டர் புரங்கள் மூன்றும் பாறி, நீறு ஆகி வீழ, புகைத்திட்ட தேவர் கோவே! பொறி இலேன் உடலம் தன்னுள் அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடித் திகைத்திட்டேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே! |
|
உரை
|
|
|
|
|
519 | மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டுக் கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினைய மாட்டேன்; ஐ நெரிந்து அகமிடற்றே அடைக்கும் போது, ஆவியார் தாம் செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே! |
|
உரை
|
|
|
|
|
520 | முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை, அப்பர் போல் ஐவர் வந்து(வ்), “அது தருக, இது விடு!” என்று(வ்) ஒப்பவே நலியல் உற்றால் உய்யும் ஆறு அறிய மாட்டேன்- செப்பமே திகழும் மேனித் திருப் புகலூரனீரே! |
|
உரை
|
|
|
|
|
521 | பொறி இலா அழுக்கை ஓம்பி, பொய்யினை மெய் என்று எண்ணி, நெறி அலா நெறிகள் சென்றேன்; நீதனே! நீதி ஏதும் அறிவிலேன்; அமரர்கோவே! அமுதினை மன்னில் வைக்கும் செறிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே! |
|
உரை
|
|
|
|
|
522 | அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி, களியின் ஆர் பாடல் ஓவாக் கடவூர் வீரட்டம் என்னும் தளியினார் பாதம் நாளும் நினைவு இலாத் தகவு இல் நெஞ்சம் தெளிவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே! |
|
உரை
|
|
|
|
|
523 | இலவின் நா மாதர் பாலே இசைந்து நான் இருந்து பின்னும் நிலவும் நாள் பல என்று எண்ணி, நீதனேன் ஆதி உன்னை உலவினால் உள்க மாட்டேன்; உன் அடி பரவும் ஞானம் செலவு இலேன்; செய்வது என்னே? திருப் புகலூரனீரே! |
|
உரை
|
|
|
|
|
524 | காத்திலேன், இரண்டும் மூன்றும்; கல்வியேல் இல்லை, என்பால்; வாய்த்திலேன், அடிமை தன்னுள்; வாய்மையால் தூயேன் அல்லேன்- பார்த்தனுக்கு அருள்கள் செய்த பரமனே! பரவுவார்கள் தீர்த்தமே திகழும் பொய்கைத் திருப் புகலூரனீரே! |
|
உரை
|
|
|
|
|
525 | நீரும் ஆய், தீயும் ஆகி, நிலனும் ஆய், விசும்பும் ஆகி, ஏர் உடைக் கதிர்கள் ஆகி, இமையவர் இறைஞ்ச நின்று(வ்), ஆய்வதற்கு அரியர் ஆகி, அங்கு அங்கே ஆடுகின்ற, தேவர்க்கும் தேவர் ஆவார்-திருப் புகலூரனாரே. |
|
உரை
|
|
|
|
|
526 | மெய்யுளே விளக்கை ஏற்றி, வேண்டு அளவு உயரத் தூண்டி உய்வது ஓர் உபாயம் பற்றி, உகக்கின்றேன்; உகவா வண்ணம் ஐவரை அகத்தே வைத்தீர்; அவர்களே வலியர், சால; செய்வது ஒன்று அறிய மாட்டேன்-திருப் புகலூரனீரே! |
|
உரை
|
|
|
|
|
527 | அரு வரை தாங்கினானும், அருமறை ஆதியானும், இருவரும் அறிய மாட்டா ஈசனார்; இலங்கை வேந்தன் கருவரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோரத் திருவிரல் சிறிது வைத்தார் திருப் புகலூரனாரே. |
|
உரை
|
|
|
|