தொடக்கம் |
|
|
4.57 திருஆவடுதுறை திருநேரிசை |
548 | மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும் ஆனாய்; நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே! துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று(வ்) “அஞ்சல்!” என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே! |
|
உரை
|
|
|
|
|
549 | நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும் ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள் உற ஐவர் நின்றார் தான் உகந்தே உகந்த தகவு இலாத் தொண்டனேன், நான்; ஆன் உகந்து ஏறுவானே! ஆவடுதுறை உளானே! |
|
உரை
|
|
|
|
|
550 | கட்டமே வினைகள் ஆன காத்து, இவை நோக்கி, ஆள் ஆய் ஒட்டவே ஒட்டி, நாளும் உன்னை உள் வைக்க மாட்டேன்- பட்ட வான் தலை கை ஏந்திப் பலி திரிந்து ஊர்கள் தோறும் அட்டமா உருவினானே! ஆவடுதுறை உளானே! |
|
உரை
|
|
|
|
|
551 | “பெருமை நன்று உடையது இல்லை” என்று நான் பேச மாட்டேன்; ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன்; கருமை இட்டு ஆய ஊனைக் கட்டமே கழிக்கின்றேன், நான்; அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே! |
|
உரை
|
|
|
|
|
552 | துட்டனாய் வினை அது என்னும் சுழித்தலை அகப்பட்டேனைக் கட்டனா ஐவர் வந்து கலக்காமை காத்துக் கொள்வாய் மட்டு அவிழ் கோதை தன்னை மகிழ்ந்து ஒரு பாகம் வைத்து(வ்) அட்டமா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே! |
|
உரை
|
|
|
|
|
553 | கார் அழல் கண்டம் மேயாய்; கடி மதில் புரங்கள் மூன்றும் ஓர் அழல் அம்பினாலே உகைத்துத் தீ எரிய மூட்டி நீர் அழல் சடை உளானே! நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே! |
|
உரை
|
|
|
|
|
554 | செறிவு இலேன்; சிந்தையுள்ளே சிவன் அடி தெரிய மாட்டேன்; குறி இலேன்; குணம் ஒன்று இல்லேன்; கூறுமா கூற மாட்டேன்; நெறி படு மதி ஒன்று இல்லேன்; நினையுமா நினைய மாட்டேன்; அறிவு இலேன்; அயர்த்துப் போனேன்-ஆவடுதுறை உளானே! |
|
உரை
|
|
|
|
|
555 | கோலம் மா மங்கை தன்னைக் கொண்டு ஒரு கோலம் ஆய சீலமே அறிய மாட்டேன்; செய்வினை மூடி நின்று ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே! |
|
உரை
|
|
|
|
|
556 | நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட, கடியது ஓர் உருவம் ஆகி, கனல்-எரி ஆகி, நின்ற வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகாா அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே. |
|
உரை
|
|
|
|
|
557 | மலைக்கு நேர் ஆய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்சத் தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து, அவற்கு அருள்கள் செய்து(வ்) அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே. |
|
உரை
|
|
|
|