4.59 திருஅவள் இவள் நல்லூர்
திருநேரிசை
568தோற்றினான் எயிறு கவ்வித் தொழில் உடை அரக்கன் தன்னைத்
தேற்றுவான் சென்று சொல்ல, “சிக்கெனத் தவிரும்!” என்று,
வீற்றினை உடையன் ஆகி வெடு வெடுத்து எடுத்தவன் தன்
ஆற்றலை அழிக்க வல்லார்-அவளி வணல்லூராரே.
உரை
   
569“வெம்பினார் அரக்கர் எல்லாம்; மிகச் சழக்கு ஆயிற்று” என்று,
“செம்பினால் எடுத்த கோயில் சிக்கெனச் சிதையும்!” என்ன,
“நம்பினார்” என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி,
அம்பினால் அழிய எய்தார்-அவளி வணல்லூராரே.
உரை
   
570கீழ்ப்படக் கருதல் ஆமோ, கீர்த்திமை உள்ளது ஆகில்?
“தோள் பெரு வலியினாலே தொலைப்பன், யான் மலையை” என்று
வேள் பட வைத்த ஆறே விதிர் விதிர்த்து அரக்கன் வீழ்ந்து(வ்)
ஆட்படக் கருதிப் புக்கார்-அவளி வணல்லூராரே.
உரை
   
571நிலை வலம் வல்லன் அல்லன், நேர்மையை நினைய மாட்டான்,
சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத்
தலை வலம் கருதிப் புக்குத் தாங்கினான் தன்னை, அன்று(வ்)
அலை குலை ஆக்குவித்தார்-அவளி வணல்லூராரே.
உரை
   
572தவ் வலி ஒன்றன் ஆகித் தனது ஒரு பெருமையாலே;
“மெய்(வ்) வலி உடையன்” என்று மிகப் பெருந் தேரை ஊர்ந்து
செவ் வலி கூர் விழி(ய்)யான் சிரமத்தான் எடுக்குற்றானை
அவ் வலி தீர்க்க வல்லார்-அவளி வணல்லூராரே.
உரை
   
573நன்மை தான் அறியமாட்டான், நடு இலா அரக்கர் கோமான்
வன்மையே கருதிச் சென்று, வலி தனைச் செலுத்தல் உற்றுக்
கன்மையால் மலையை ஓடி, கருதித் தான் எடுத்து, வாயால்
“அம்மையோ!” என்ன வைத்தார்-அவளி வணல்லூராரே.
உரை
   
574கதம் படப் போது வார்கள் போதும் அக் கருத்தினாலே
“சிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிரும்!” என்று,
மதம் படு மனத்தன் ஆகி, வண்மையான் மிக்கு நோக்க,
அதம் பழத்து உருவு செய்தார்-அவளி வணல்லூராரே.
உரை
   
575நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர் கோனை,
“ஓடு, மிக்கு!” என்று சொல்லி, ஊன்றினான், உகிரினாலே;
“பாடு மிக்கு உய்வன்” என்று பணிய, நல்-திறங்கள் காட்டி
ஆடு மிக்கு அரவம் பூண்டார்-அவளி வணல்லூராரே.
உரை
   
576ஏனம் ஆய்க் கிடந்த மாலும், எழில் தரு முளரியானும்,
ஞானம் தான் உடையர் ஆகி நன்மையை அறிய மாட்டார்
சேனம் தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி
ஆனந்த அருள்கள் செய்தார்-அவளி வணல்லூராரே.
உரை
   
577ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன் தன்னைத்
தாக்கினான், விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி;
நோக்கினார், அஞ்சத் தன்னை, நோன்பு இற; ஊன்று சொல்லி
ஆக்கினார், அமுதம் ஆக-அவளி வணல்லூராரே.
உரை