தொடக்கம் |
|
|
4.60 திருப்பெருவேளூர் திருநேரிசை |
578 | மறை அணி நாவினானை, மறப்பு இலார் மனத்து உளானை, கறை அணி கண்டன் தன்னை, கனல்-எரி ஆடினானை, பிறை அணி சடையினானை, பெருவேளூர் பேணினானை, நறை அணி மலர்கள் தூவி நாள்தொறும் வணங்குவேனே. |
|
உரை
|
|
|
|
|
579 | நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற பாதன் ஆம் பரம யோகி, பல பல திறத்தினாலும் பேதனாய்த் தோன்றினானை, பெருவேளூர் பேணினானை, ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே, |
|
உரை
|
|
|
|
|
580 | குறவி தோள் மணந்த செல்வக் குமரவேள் தாதை என்று நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர் பாகத்தானை, பிறவியை மாற்றுவானை, பெருவேளூர் பேணினானை, உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே. |
|
உரை
|
|
|
|
|
581 | மைஞ் ஞவில் கண்டன் தன்னை, வலங்கையில் மழு ஒன்று ஏந்திக் கைஞ் ஞவில் மானினோடும் கனல்-எரி ஆடினானை, பிஞ்ஞகன் தன்னை, அம் தண் பெருவேளூர் பேணினானை, பொய்ஞ் ஞெக நினையமாட்டாப் பொறி இலா அறிவினேனே! |
|
உரை
|
|
|
|
|
582 | ஓடை சேர் நெற்றி யானை, உரிவையை மூடினானை, வீடு அதே காட்டுவானை, வேதம் நான்கு ஆயினானை, பேடை சேர் புறவு நீங்காப் பெருவேளூர் பேணினானை, கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே. |
|
உரை
|
|
|
|
|
583 | கச்சை சேர் நாகத்தானை, கடல் விடங் கண்டத்தானை, கச்சி ஏகம்பன் தன்னை, கனல் எரி ஆடுவானை, பிச்சை சேர்ந்து உழல் வினானை, பெருவேளூர் பேணினானை, இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே. |
|
உரை
|
|
|
|
|
584 | சித்தராய் வந்து தன்னைத் திருவடி வணங்குவார்கள் முத்தனை, மூர்த்தி ஆய முதல்வனை, முழுதும் ஆய பித்தனை, பிறரும் ஏத்தப் பெருவேளூர் பேணினானை, மெத்த நேயவனை, நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே. |
|
உரை
|
|
|
|
|
585 | முண்டமே தாங்கினானை, முற்றிய ஞானத்தானை, வண்டு உலாம் கொன்றைமாலை வளர்மதிக் கண்ணியானை, பிண்டமே ஆயினானை, பெருவேளூர் பேணினானை, அண்டம் ஆம் ஆதியானை, அறியும் ஆறு அறிகிலேனே. |
|
உரை
|
|
|
|
|
586 | விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து(வ்) எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும்; பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை மருவி, நான் வாழ்த்தி, உய்யும் வகை அது நினைக்கின்றேனே. |
|
உரை
|
|
|
|
|
587 | பொருகடல் இலங்கை மன்னன் உடல் கெடப் பொருத்தி நல்ல கருகிய கண்டத்தானை, கதிர் இளங்கொழுந்து சூடும் பெருகிய சடையினானை, பெருவேளூர் பேணினானை, உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே. |
|
உரை
|
|
|
|