தொடக்கம் |
|
|
4.62 திருஆலவாய் திருநேரிசை, |
599 | “வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!” என்று என்று ஓதியே, மலர்கள் தூவி, ஒடுங்கி, நின் கழல்கள் காண- பாதி ஓர் பெண்ணை வைத்தாய்! படர்சடை மதியம் சூடும் ஆதியே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே! |
|
உரை
|
|
|
|
|
600 | “நம்பனே! நான் முகத்தாய்! நாதனே! ஞான மூர்த்தி! என் பொனே! ஈசா!” என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும் பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனிப் பிறவா வண்ணம்- அன்பனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே! |
|
உரை
|
|
|
|
|
601 | ஒரு மருந்து ஆகி உள்ளாய், உம்பரோடு உலகுக்கு எல்லாம்; பெரு மருந்து ஆகி நின்றாய்; பேர் அமுதின் சுவை ஆய்க் கரு மருந்து ஆகி உள்ளாய்;-ஆளும் வல்வினைகள் தீர்க்கும் அரு மருந்து! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே! |
|
உரை
|
|
|
|
|
602 | செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர் தேவே! மை அணி கண்டத்தானே! மான்மறி மழு ஒன்று ஏந்தும் சைவனே!-சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன் ஐயனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே! |
|
உரை
|
|
|
|
|
603 | வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும் உண்டதும் இல்லை; சொல்லில், உண்டது நஞ்சு தன்னை; பண்டு உனை நினைய மாட்டாப் பளகனேன் உளம் அது ஆர, அண்டனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே! |
|
உரை
|
|
|
|
|
604 | “எஞ்சல் இல் புகல் இது” என்று என்று ஏத்தி நான் ஏசற்று, என்றும் வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம் நஞ்சினை மிடற்றில் வைத்த நன் பொருள் பதமே! நாயேற்கு “அஞ்சல்!” என்று-ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே! |
|
உரை
|
|
|
|
|
605 | வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன் செழு மலர்ப்பாதம் காண-தெண் திரை நஞ்சம் உண்ட குழகனே! கோலவில்லீ! கூத்தனே! மாத்து ஆய் உள் அழகனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே! |
|
உரை
|
|
|
|
|
606 | நறுமலர் நீரும் கொண்டு நாள் தொறும் ஏத்தி வாழ்த்திச் செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம் மறி கடல் வண்ணன் பாகா! மாமறை அங்கம் ஆறும் அறிவனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே! |
|
உரை
|
|
|
|
|
607 | “நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலைப் பந்தர் செய்த சிலந்தியை அரசு அது ஆள அருளினாய்” என்று திண்ணம் கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக அலந்தனன்;-ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே! |
|
உரை
|
|
|
|
|
608 | பொடிக்கொடு பூசி, பொல்லாக் குரம்பையில் புந்தி, ஒன்றி, பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி, நான் இருக்கமாட்டேன்- “எடுப்பன்” என்று இலங்கைக் கோன் வந்து எடுத்தலும், இருபது(த்) தோள அடர்த்தனே! ஆலவாயில் அப்பனே!-அருள் செயாயே! |
|
உரை
|
|
|
|