தொடக்கம் |
|
|
4.66 திருநாகேச்சுரம் திருநேரிசை |
639 | கச்சை சேர் அரவர் போலும்; கறை அணி மிடற்றர் போலும்; பிச்சை கொண்டு உண்பர் போலும்; பேர் அருளாளர் போலும்; இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை நச்சுவார்க்கு இனியர் போலும்-நாக ஈச்சுரவனாரே. |
|
உரை
|
|
|
|
|
640 | வேடு உறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும்; காடு உறு பதியர் போலும்; கடிபுனல் கங்கை நங்கை சேடு எறி சடையர் போலும்; தீவினை தீர்க்க வல்ல நாடு அறி புகழர் போலும்-நாக ஈச்சுரவனாரே. |
|
உரை
|
|
|
|
|
641 | கல்-துணை வில் அது ஆகக் கடி அரண் செற்றார் போலும்; பொன்துணைப் பாதர் போலும்; புலி அதள் உடையார் போலும்; சொல்-துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம் நல்-துணை ஆவர் போலும்-நாக ஈச்சுரவனாரே. |
|
உரை
|
|
|
|
|
642 | கொம்பு அனாள் பாகர் போலும்; கொடி உடை விடையர் போலும்; செம்பொன் ஆர் உருவர் போலும்; திகழ் திரு நீற்றர் போலும்; “எம்பிரான்! எம்மை ஆளும் இறைவனே!” என்று தம்மை நம்புவார்க்கு அன்பர் போலும்-நாக ஈச்சுரவனாரே. |
|
உரை
|
|
|
|
|
643 | கடகரி உரியர் போலும்; கனல் மழுவாளர் போலும்; பட அரவு அரையர் போலும்; பாரிடம் பலவும் கூடிக் குடம் உடை முழவம் ஆர்ப்ப, கூளிகள் பாட, நாளும் நடம் நவில் அடிகள் போலும் நாக ஈச்சுரவனாரே. |
|
உரை
|
|
|
|
|
644 | பிறை உறு சடையர் போலும்; பெண் ஒரு பாகர் போலும்; மறை உறு மொழியர் போலும்; மால், மறையவன் தன்னோடு, முறை முறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற நறவு அமர் கழலர் போலும்-நாக ஈச்சுரவனாரே. |
|
உரை
|
|
|
|
|
645 | வஞ்சகர்க்கு அரியர் போலும்; மருவினோர்க்கு எளியர் போலும்; குஞ்சரத்து உரியர் போலும்; கூற்றினைக் குமைப்பர் போலும்; விஞ்சையர் இரிய அன்று வேலைவாய் வந்து எழுந்த நஞ்சு அணி மிடற்றர் போலும்-நாக ஈச்சுரவனாரே. |
|
உரை
|
|
|
|
|
646 | போகம் ஆர் மோடி கொங்கை புணர் தரு புனிதர் போலும்; வேகம் ஆர் விடையர் போலும்; வெண் பொடி ஆடும் மேனிப் பாகம் மால் உடையர் போலும்; பருப்பத வில்லர் போலும்; நாகம் நாண் உடையர் போலும்-நாக ஈச்சுரவனாரே. |
|
உரை
|
|
|
|
|
647 | கொக்கரை, தாளம், வீணை, பாணி செய் குழகர் போலும்; அக்கு அரை அணிவர் போலும்; ஐந்தலை அரவர் போலும்; வக்கரை அமர்வர் போலும்; மாதரை மையல் செய்யும் நக்க(அ)ரை உருவர் போலும்-நாக ஈச்சுரவனாரே. |
|
உரை
|
|
|
|
|
648 | வின்மையால் புரங்கள் மூன்றும் வெந்தழல் விரித்தார் போலும்; தன்மையால் அமரர் தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும்; வன்மையால் மலை எடுத்தான் வலியினைத் தொலைவித்து, ஆங்கே நன்மையால் அளிப்பர் போலும்-நாக ஈச்சுரவனாரே. |
|
உரை
|
|
|
|