தொடக்கம் |
|
|
4.67 திருக்கொண்டீச்சுரம் திருநேரிசை |
649 | வரைகிலேன், புலன்கள் ஐந்தும்; வரைகிலாப் பிறவி மாயப் புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன்; அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே!” அஞ்சல்!” என்னாய் திரை உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே! |
|
உரை
|
|
|
|
|
650 | தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினைக் குழியில் வீழ்ந்து பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன்; அண்டனே! அண்டவாணா! அறிவனே! “அஞ்சல்!” என்னாய் தெண் திரைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே! |
|
உரை
|
|
|
|
|
651 | கால் கொடுத்து, எலும்பு மூட்டி, கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து தோல் உடுத்து, உதிரம் அட்டி, தொகு மயிர் மேய்ந்த கூரை ஓல் எடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன்- சேல் உடைப் பழனம் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே! |
|
உரை
|
|
|
|
|
652 | கூட்டம் ஆய் ஐவர் வந்து கொடுந் தொழில் குணத்தர் ஆகி ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே! காட்டு இடை அரங்கம் ஆக ஆடிய கடவுளேயோ! சேட்டு இரும் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே! |
|
உரை
|
|
|
|
|
653 | பொக்கம் ஆய் நின்ற பொல்லாப் புழு மிடை முடை கொள் ஆக்கை தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்று அறுவரும் துயக்கம் எய்த, மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்து போனேன் செக்கரே திகழும் மேனித் திருக்கொண்டீச்சுரத்து உளானே! |
|
உரை
|
|
|
|
|
654 | ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடைகலம் ஆவது, என்றும்; மான் உலாம் மழைக்கணார் தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி, நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன்; எண்ணம் இல்லேன் தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திருக்கொண்டீச்சுரத்து உளானே! |
|
உரை
|
|
|
|
|
655 | சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடைப் பதிக்கு நாதர் வாணிகர் ஐவர் தொண்ணூற்று அறுவரும் மயக்கம் செய்து, பேணிய பதியின் நின்று பெயரும் போது அறிய மாட்டேனெ சேண் உயர் மாடம் நீடு திருக்கொண்டீச்சுரத்து உளானே! |
|
உரை
|
|
|
|
|
656 | பொய்ம் மறித்து இயற்றி வைத்து, புலால் கமழ் பண்டம் பெய்து பைம் மறித்து இயற்றியன்ன பாங்கு இலாக் குரம்பை நின்று கைம் மறித்தனைய ஆவி கழியும் போது அறிய மாட்டேன்; செந்நெறிச் செலவு காணேன்திருக்கொண்டீச்சுரத்து உளானே! |
|
உரை
|
|
|
|
|
657 | பாலனாய்க் கழிந்த நாளும், பனிமலர்க் கோதை மார் தம் மேலனாய்க் கழிந்த நாளும், மெலிவொடு மூப்பு வந்து கோலனாய்க் கழிந்த நாளும், குறிக்கோள் இலாது கெட்டேன்- சேல் உலாம் பழன வேலித் திருக்கொண்டீச்சுரத்து உளானே! |
|
உரை
|
|
|
|
|
658 | விரை தரு கருமென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண் கண்ணாள வெருவர, இலங்கைக் கோமான் விலங்கலை எடுத்த ஞான்று, பருவரை அனைய தோளும் முடிகளும் பாரி வீழத் திருவிரல் ஊன்றினானே திருக்கொண்டீச்சுரத்து உளானே! |
|
உரை
|
|
|
|