தொடக்கம் |
|
|
4.71 திருநாகைக்காரோணம் திருநேரிசை |
688 | மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள் சுற்றம் என்னும் வினையுளே விழுந்து, அழுந்தி, வேதனைக்கு இடம் ஆகாதே, கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை நினையுமா வல்லீர் ஆகில் உய்யல் ஆம்-நெஞ்சினீரே! |
|
உரை
|
|
|
|
|
689 | வையனை, வையம் உண்ட மால் அங்கம் தோள்மேல் கொண்ட செய்யனை, செய்ய போதில்-திசை முகன் சிரம் ஒன்று ஏந்தும் கையனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட ஐயனை, நினைந்த நெஞ்சே! அம்ம, நாம் உய்ந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
690 | நிருத்தனை, நிமலன் தன்னை, நீள் நிலம் விண்ணின் மிக்க விருத்தனை, வேதவித்தை, விளை பொருள் மூலம் ஆன கருத்தனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட ஒருத்தனை, உணர்தலால் நாம் உய்ந்தவா!-நெஞ்சினீரே! |
|
உரை
|
|
|
|
|
691 | மண் தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர் தெண் திரை கடைய வந்த தீவிடம் தன்னை உண்ட கண்டனை, கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட அண்டனை, நினைந்த நெஞ்சே! அம்ம, நாம் உய்ந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
692 | நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா, அரவம், சூடி, மறை ஒலி பாடி, ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன், கறை மலி கடல் சூழ் நாகைக் காரோணம் கோயில் கொண்ட இறைவனை, நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே. |
|
உரை
|
|
|
|
|
693 | வெம் பனைக் கருங்கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த கம்பனை, காலற் காய்ந்த காலனை, ஞாலம் ஏத்தும் உம்பனை, உம்பர் கோனை, நாகைக் காரோணம் மேய செம் பொனை, நினைந்த நெஞ்சே! திண்ணம், நாம் உய்ந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
694 | வெங் கடுங் கானத்து ஏழை தன்னொடும் வேடனாய்ச் சென்று அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானை, மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானை, கங்குலும் பகலும் காணப் பெற்று நாம் களித்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
695 | தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால் செற்ற வெஞ்சிலையர்; வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார் கற்றவர் பயிலும் நாகைக் காரோணம் கருதி ஏத்தப்- பெற்றவர் பிறந்தார்; மற்றுப் பிறந்தவர் பிறந்திலாரே! |
|
உரை
|
|
|
|
|
696 | கரு மலி கடல் சூழ் நாகைக் காரோணர் கமல பாதத்து ஒருவிரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான்; இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம் திருவடி தரித்து நிற்க, திண்ணம், நாம் உய்ந்தஆறே! |
|
உரை
|
|
|
|