தொடக்கம் |
|
|
4.72 திருஇன்னம்பர் திருநேரிசை |
697 | விண்ணவர் மகுடகோடி மிடைந்த சேவடியர் போலும்; பெண் ஒருபாகர் போலும்; பேடு அலி ஆணர் போலும்; வண்ண மால் அயனும் காணா மால்வரை எரியர் போலும்; எண் உரு அநேகர் போலும்-இன்னம்பர் ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
698 | பன்னிய மறையர் போலும்; பாம்பு அரை உடையர் போலும்; துன்னிய சடையர் போலும்; தூ மதி மத்தர் போலும்; மன்னிய மழுவர் போலும்; மாது இடம் மகிழ்வர் போலும்; என்னையும் உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
699 | மறி ஒரு கையர் போலும்; மாது உமை உடையர் போலும்; பறி தலைப் பிறவி நீக்கிப் பணி கொள வல்லர் போலும்; செறிவு உடை அங்கமாலை சேர் திரு உருவர் போலும்; எறிபுனல் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
700 | விடம் மலி கண்டர் போலும்; வேள்வியை அழிப்பர் போலும்; கடவு நல் விடையர் போலும்; காலனைக் காய்வர் போலும்; படம் மலி அரவர் போலும்; பாய் புலித் தோலர் போலும்; இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
701 | அளி மலர்க் கொன்றை துன்றும் அவிர்சடை உடையர் போலும்; களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும்; வெளி வளர் உருவர் போலும்; வெண் பொடி அணிவர் போலும்; எளியவர், அடியர்க்கு என்றும்;-இன்னம்பர் ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
702 | கணை அமர் சிலையர் போலும்; கரி உரி உடையர் போலும்; துணை அமர் பெண்ணர் போலும்; தூ மணிக் குன்றர் போலும்; அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும் இணை அடி உடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
703 | பொருப்பு அமர் புயத்தர் போலும்; புனல் அணி சடையர் போலும்; மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும்; உருத்திரமூர்த்தி போலும்; உணர்வு இலார் புரங்கள் மூன்றும் எரித்திடு சிலையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
704 | காடு இடம் உடையர் போலும்; கடிகுரல் விளியர் போலும்; வேடு உரு உடையர் போலும்; வெண்மதிக் கொழுந்தர் போலும்; கோடு அலர் வன்னி, தும்பை, கொக்கு இறகு, அலர்ந்த கொன்றை ஏடு, அமர் சடையர் போலும்-இன்னம்பர் ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
705 | காறிடு விடத்தை உண்ட கண்டர்; எண் தோளர் போலும்; நீறு உடை உருவர் போலும்; நினைப்பினை அரியர் போலும்; பாறு உடைத் தலை கை ஏந்திப் பலி திரிந்து உண்பர் போலும்; ஏறு உடைக் கொடியர் போலும்-இன்னம்பர் ஈசனாரே. |
|
உரை
|
|
|
|
|
706 | ஆர்த்து எழும் இலங்கைக் கோனை அருவரை அடர்ப்பர் போலும்; பார்த்தனோடு அமர் பொரூது படை கொடுத்து அருள்வர் போலும்; தீர்த்தம் ஆம் கங்கை தன்னைத் திருச்சடை வைப்பர் போலும்; ஏத்த ஏழ் உலகும் வைத்தார்-இன்னம்பர் ஈசனாரே. |
|
உரை
|
|
|
|