தொடக்கம் |
|
|
4.74 பொது “நினைந்த” திரு நேரிசை |
716 | முத்தினை, மணியை, பொன்னை, முழுமுதல் பவளம் ஏய்க்கும் கொத்தினை, வயிர மாலைக் கொழுந்தினை, அமரர் சூடும் வித்தினை, வேத வேள்விக் கேள்வியை விளங்க நின்ற அத்தனை-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
717 | முன்பனை, உலகுக்கு எல்லாம் மூர்த்தியை, முனிகள் ஏத்தும் இன்பனை, இலங்கு சோதி இறைவனை, அரிவை அஞ்ச வன் பனைத் தடக்கை வேள்விக் களிற்றினை உரித்த எங்கள் அன்பனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
718 | கரும்பினும் இனியான் தன்னை, காய்கதிர்ச் சோதியானை, இருங்கடல் அமுதம் தன்னை, இறப்பொடு பிறப்பு இலானை, பெரும் பொருள் கிளவியானை, பெருந்தவ முனிவர் ஏத்தும் அரும்பொனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
719 | செருத்தனை அருத்தி செய்து செஞ் சரம் செலுத்தி ஊர்மேல் கருத்தனை, கனகமேனிக் கடவுளை, கருதும் வானோர்க்கு ஒருத்தனை, ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா நிருத்தனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
720 | கூற்றினை உதைத்த பாதக் குழகனை, மழலை வெள் ஏறு ஏற்றனை, இமையோர் ஏத்த இருஞ்சடைக் கற்றை தன்மேல் ஆற்றனை, அடியர் ஏத்தும் அமுதனை, அமுத யோக நீற்றனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
721 | கருப் பனைத் தடக்கை வேழக் களிற்றினை உரித்த கண்டன், விருப்பனை, விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் பொருப்பனை, பொருப்பன் மங்கை பங்கனை, அங்கை ஏற்ற நெருப்பனை,-நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
722 | நீதியால் நினைப்பு உளானை, நினைப்பவர் மனத்து உளானை, சாதியை, சங்க வெண் நீற்று அண்ணலை, விண்ணில் வானோர் சோதியை, துளக்கம் இல்லா விளக்கினை, அளக்கல் ஆகா ஆதியை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
723 | பழகனை உலகுக்கு எல்லாம், பருப்பனை, பொருப்போடு ஒக்கும் மழ களியானையின் தோல் மலை மகள் நடுங்கப் போர்த்த குழகனை, குழவித் திங்கள் குளிர்சடை மருவ வைத்த அழகனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
724 | விண் இடை மின் ஒப்பானை, மெய்ப் பெரும் பொருள் ஒப்பானை, கண் இடை மணி ஒப்பானை, கடு இருள் சுடர் ஒப்பானை, எண் இடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட அண்ணலை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! |
|
உரை
|
|
|
|
|
725 | உரவனை, திரண்ட திண்தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர் நிரவனை, நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர் தங்கள் குரவனை, குளிர் வெண் திங்கள் சடை இடைப் பொதியும் ஐவாய்- அரவனை,-நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே! |
|
உரை
|
|
|
|