தொடக்கம் |
|
|
4.79 பொது குறைந்த திரு நேரிசை |
764 | தம் மானம் காப்பது ஆகித் தையலார் வலியுள் ஆழ்ந்து அம்மானை, அமுதன் தன்னை, ஆதியை, அந்தம் ஆய செம் மான ஒளி கொள் மேனிச் சிந்தையுள் ஒன்றி நின்ற எம்மானை,-நினைய மாட்டேன்;-என் செய்வான் தோன்றினேனே! |
|
உரை
|
|
|
|
|
765 | மக்களே, மணந்த தாரம், வல் வயிற்று அவரை, ஓம்பும் சிக்குளே அழுந்தி, ஈசன் திறம் படேன்; தவம் அது ஓரேன்; கொப்புளே போலத் தோன்றி அதனுளே மறையக் கண்டும், இக் களேபரத்தை ஓம்ப, என் செய்வான் தோன்றினேனே! |
|
உரை
|
|
|
|
|
766 | கூழையேன் ஆகமாட்டேன், கொடு வினைக் குழியில் வீழ்ந்து ஏழின் இன் இசையினாலும் இறைவனை ஏத்த மாட்டேன்; மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தை மார் தமக்கும் பொல்லேன் ஏழையேன் ஆகி, நாளும் என் செய்வான் தோன்றினேனே! |
|
உரை
|
|
|
|
|
767 | முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினைய மாட்டேன்; பின்னை நான் பித்தன் ஆகிப் பிதற்றுவன், பேதையேன் நான்; என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை என் உளே நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே! |
|
உரை
|
|
|
|
|
768 | கறை அணி கண்டன் தன்னைக் காமரம் கற்றும் இல்லேன்; பிறை நுதல் பேதை மாதர் பெய் வளையார்க்கும் அல்லேன்; மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் இறையேயும் ஏத்த மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே! |
|
உரை
|
|
|
|
|
769 | வளைத்து நின்று, ஐவர்கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய, தளைத்து வைத்து உலையை ஏற்றித் தழல்-எரி மடுத்த நீரில்- திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல்-தெளிவு இலாதேன், இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே! |
|
உரை
|
|
|
|