தொடக்கம் |
|
|
4.81 கோயில் திருவிருத்தம் |
780 | கரு நட்ட கண்டனை, அண்டத் தலைவனை, கற்பகத்தை, செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை, செந் தீ முழங்கத் திரு நட்டம் ஆடியை, தில்லைக்கு இறையை, சிற்றம்பலத்துப் பெரு நட்டம் ஆடியை, “வானவர் கோன்” என்று வாழ்த்துவனே. |
|
உரை
|
|
|
|
|
781 | ஒன்றி இருந்து நினைமின்கள்! உம் தமக்கு ஊனம் இல்லை; கன்றிய காலனைக் காலால் கடிந்தான், அடியவற்கா; சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்!- “என்று வந்தாய்?” என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே. |
|
உரை
|
|
|
|
|
782 | கல்மனவீர்! கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே? நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் பொன் மலையில் வெள்ளிக் குன்று அது போலப் பொலிந்து இலங்கி, என் மனமே ஒன்றிப் புக்கனன்; போந்த சுவடு இல்லையே! |
|
உரை
|
|
|
|
|
783 | குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே! |
|
உரை
|
|
|
|
|
784 | வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி; மதித்திடுமின்! பார்த்தற்குப் பாசுபதம் அருள் செய்தவன்,-பத்தர் உள்ள கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான், தில்லை அம்பலத்துக் கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ, நம் தம் கூழைமையே? |
|
உரை
|
|
|
|
|
785 | பூத்தன, பொன்சடை பொன் போல் மிளிர; புரி கணங்கள் ஆர்த்தன, கொட்டி; அரித்தன, பல் குறள் பூதக்கணம்; தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்துக் கூத்தனின் கூத்து வல்லார் உளரோ, என் தன் கோல்வளைக்கே? |
|
உரை
|
|
|
|
|
786 | முடி கொண்ட மத்தமும், முக்கண்ணின் நோக்கும், முறுவலிப்பும், துடி கொண்ட கையும், துதைந்த வெண் நீறும், சுரி குழலாள் படி கொண்ட பாகமும், பாய் புலித்தோலும், என் பாவி நெஞ்சில் குடி கொண்டவா, தில்லை அம்பலக் கூத்தன் குரைகழலே! |
|
உரை
|
|
|
|
|
787 | படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன்; இடைக்கலம் அல்லேன்; எழு பிறப்பும்(ம்) உனக்கு ஆட் செய்கின்றேன்; துடைக்கினும் போகேன்; தொழுது வணங்கித் தூ நீறு அணிந்து உன் அடைக்கலம் கண்டாய்-அணி தில்லைச் சிற்றம்பலத்து அரனே! |
|
உரை
|
|
|
|
|
788 | பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து, புரிசடைகள் மின் ஒத்து இலங்க, பலி தேர்ந்து, உழலும் விடங்க வேடச்- சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் என் அத்தன் ஆடல் கண்டு இன்பு உற்றதால், இவ் இரு நிலமே. |
|
உரை
|
|
|
|
|
789 | சாட எடுத்தது, தக்கன் தன் வேள்வியில் சந்திரனை; வீட எடுத்தது, காலனை; நாரணன் நான்முகனும் தேட எடுத்தது,-தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ,-நம்மை ஆட்கொண்டதே! |
|
உரை
|
|
|
|