தொடக்கம் |
|
|
4.85 திருச்சோற்றுத்துறை திருவிருத்தம் |
812 | காலை எழுந்து, கடிமலர் தூயன தாம் கொணர்ந்து மேலை அமரர் விரும்பும் இடம்-விரையான் மலிந்த சோலை மணம் கமழ்-சோற்றுத்துறை உறைவார் சடை மேல் மாலை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே? |
|
உரை
|
|
|
|
|
813 | வண்டு அணை கொன்றையும், வன்னியும், மத்தமும், வாள் அரவும், கொண்டு அணைந்து ஏறு முடி உடையான், குரை சேர் கழற்கே தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடைமேல் வெண் தலை மாலை அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே? |
|
உரை
|
|
|
|
|
814 | அளக்கும் நெறியினன், அன்பர்கள் தம் மனத்து ஆய்ந்து கொள்வான், விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர் கோன், துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல் திளைக்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே? |
|
உரை
|
|
|
|
|
815 | ஆய்ந்த கை வாள் அரவத்தொடு, மால்விடை ஏறி, எங்கும் பேர்ந்த கை மான், நடம் ஆடுவர்; பின்னு சடை இடையே சேர்ந்த கைம் மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார் ஏந்து கைச் சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே! |
|
உரை
|
|
|
|
|
816 | கூற்றைக் கடந்ததும், கோள் அரவு ஆர்த்ததும், கோள் உழுவை நீற்றில்-துதைந்து திரியும் பரிசு அதும், நாம் அறியோம்; ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும், சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே. |
|
உரை
|
|
|
|
|
817 | வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர் கொல்லாடி நின்று குமைக்கிலும், வானவர் வந்து இறைஞ்சச் சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே! |
|
உரை
|
|
|
|
|
818 | ஆயம் உடையது நாம் அறிவோம்; அரணத்தவரைக் காயக் கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான், தூய வெண் நீற்றினன், சோற்றுத்துறை உறைவார், சடைமேல் பாயும் வெண் நீர்த்திரைக் கங்கை எம்மானுக்கு அழகியதே! |
|
உரை
|
|
|
|
|
819 | அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை உண்டும் அதனை ஒடுக்க வல்லான், மிக்க உம்பர்கள் கோன், தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார், சடைமேல் இண்டை மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே? |
|
உரை
|
|
|
|
|
820 | கடல் மணிவண்ணன், கருதிய நான்முகன் தான், அறியான்; விடம் அணி கண்டம் உடையவன்; தான் எனை ஆள் உடையான்; சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார்; சடை மேல் படம் மணி நாகம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே? |
|
உரை
|
|
|
|
|
821 | இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரியக் கலங்க விரலினால் ஊன்றி அவனைக் கருத்து அழித்த துலங்கல் மழுவினான், சோற்றுத்துறை உறைவார், சடைமேல் இலங்கும் மதியம் அன்றோ, எம்பிரானுக்கு அழகியதே? |
|
உரை
|
|
|
|