தொடக்கம் |
|
|
4.86 திருஒற்றியூர் திருவிருத்தம் |
822 | செற்றுக் களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று இற்றுக் கிடந்தது போலும், இளம்பிறை; பாம்பு, அதனைச் சுற்றிக் கிடந்தது, கிம்புரி போலச் சுடர் இமைக்கும்; நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால்-ஒற்றியூரனுக்கே. |
|
உரை
|
|
|
|
|
823 | சொல்லக் கருதியது ஒன்று உண்டு, கேட்கில்; தொண்டு ஆய் அடைந்தார் அல்லல் படக் கண்டு பின் என் கொடுத்தி?-அலை கொள் முந்நீர் மல்லல்-திரைச் சங்கம் நித்திலம் கொண்டு வம்பக் கரைக்கே ஒல்லை(த்) திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே! |
|
உரை
|
|
|
|
|
824 | பரவை வரு திரை நீர்க் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல் அரவம் அணி தரு-கொன்றை, இளந் திங்கள், சூடியது ஓர் குரவ நறுமலர், கோங்கம், அணிந்து குலாய-சென்னி, உரவு திரை கொணர்ந்து எற்று, ஒற்றியூர் உறை உத்தமனே! |
|
உரை
|
|
|
|
|
825 | தான் அகம்காடு, அரங்கு ஆக உடையது; தன் அடைந்தார் ஊன் அகம் நாறும் உடை தலையில், பலி கொள்வது, தான்; தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறை வார் அவர்தாம் தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே. |
|
உரை
|
|
|
|
|
826 | வேலைக்-கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த மாலைச் சடையார்க்கு உறைவு இடம் ஆவது, வாரி குன்றா ஆலைக் கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த சோலை, திரு ஒற்றியூரை எப்போதும் தொழுமின்களே! |
|
உரை
|
|
|
|
|
827 | புற்றினில் வாழும் அரவுக்கும், திங்கட்கும், கங்கை என்னும் சிற்றிடையாட்கும், செறிதரு கண்ணிக்கும், சேர்வு இடம் ஆம்- பெற்றுடையான், பெரும் பேச்சு உடையான், பிரியாது எனை ஆள் விற்று உடையான் ஒற்றியூர் உடையான் தன் விரிசடையே. |
|
உரை
|
|
|
|
|
828 | இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை; இமயம் என்னும் குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்குக் கூறு இட்ட நாள் அன்று, அரைக் கண்ணும் கொடுத்து, உமையாளையும் பாகம் வைத்த ஒன்றரைக் கண்ணன் கண்டீர், ஒற்றியூர் உறை உத்தமனே! |
|
உரை
|
|
|
|
|
829 | சுற்றி வண்டு யாழ் செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர்; பிறர் இடை நீ ஒற்றி கொண்டாய்; ஒற்றியூரையும் கைவிட்டு, உறும் என்று எண்ணி விற்றி கண்டாய்; மற்று இது ஒப்பது இல், இடம்-வேதியனே! |
|
உரை
|
|
|
|
|
830 | சுற்றிக் கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான்; ஒற்றித் திரி தந்து நீ என்ன செய்தி? உலகம் எல்லாம் பற்றித் திரி தந்து பல்லொடு நா மென்று கண் குழித்துத் தெற்றித்து இருப்பது அல்லால், என்ன செய்யும், இத் தீவினையே? |
|
உரை
|
|
|
|
|
831 | அம் கள் கடுக்கைக்கு முல்லைப் புறவம்; முறுவல் செய்யும் பைங்கண்-தலைக்கு சுடலைக் களரி; பரு மணி சேர் கங்கைக்கு வேலை; அரவுக்குப் புற்று; கலை நிரம்பாத் திங்கட்கு வானம்-திரு ஒற்றியூரர் திருமுடியே. |
|
உரை
|
|
|
|
|
832 | தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இறப் பாதம் தன்னால் ஒருக்கின ஆறு அடியேனைப் பிறப்பு அறுத்து ஆள வல்லான், நெருக்கின வானவர் தானவர் கூடிக் கடைந்த நஞ்சைப் பரு(க்)கின ஆறு என் செய்கேன்?-ஒற்றியூர் உறை பண்டங்கனே! |
|
உரை
|
|
|
|