தொடக்கம் |
|
|
4.87 திருப்பழனம் திருவிருத்தம் |
833 | மேவித்து நின்று விளைந்தன, வெந்துயர் துக்கம் எல்லாம்; ஆவித்து நின்று கழிந்தன, அல்லல்; அவை அறுப்பான் பாவித்த பாவனை நீ அறிவாய்;-பழனத்து அரசே!- கூவித்துக் கொள்ளும் தனை அடியேனைக் குறிக்கொள்வதே! |
|
உரை
|
|
|
|
|
834 | சுற்றி நின்றார்; புறம் காவல் அமரர்; கடைத் தலையில் மற்று நின்றார்; திருமாலொடு நான்முகன் வந்து அடிக்கீழ்ப் பற்றி நின்றார், -பழனத்து அரசே!-உன் பணி அறிவான் உற்று நின்றார்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே! |
|
உரை
|
|
|
|
|
835 | ஆடி நின்றாய், அண்டம் ஏழும் கடந்து போய்; மேல் அவையும் கூடி நின்றாய்; குவிமென் முலையாளையும் கொண்டு உடனே- பாடி நின்றாய்;-பழனத்து அரசே!-அங்கு ஓர் பால் மதியம் சூடி நின்றாய்; அடியேனை அஞ்சாமைக் குறிக்கொள்வதே! |
|
உரை
|
|
|
|
|
836 | எரித்து விட்டாய், அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும்; உரித்து விட்டாய், உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை; பரித்து விட்டாய்,-பழனத்து அரசே!-கங்கை வார் சடை மேல்- தரித்து விட்டாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே! |
|
உரை
|
|
|
|
|
837 | முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும்(ம்) உடனே- மன்னியும், அங்கும் இருந்தனை; மாய மனத்தவர்கள் பன்னிய நூலின் பரிசு அறிவாய்;-பழனத்து அரசே! உன்னியும் உன் அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே! |
|
உரை
|
|
|
|
|
838 | ஏய்ந்து அறுத்தாய், இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை; காய்ந்து அறுத்தாய், கண்ணினால் அன்று காமனை; காலனையும் பாய்ந்து அறுத்தாய்;-பழனத்து அரசே!-என் பழவினை நோய் ஆய்ந்து அறுத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே! |
|
உரை
|
|
|
|
|
839 | மற்று வைத்தாய், அங்கு ஓர் மால் ஒரு பாகம்; மகிழ்ந்து உடனே- உற்று வைத்தாய், உமையாளொடும் கூடும் பரிசு எனவே; பற்றி வைத்தாய்,-பழனத்து அரசே!-அங்கு ஓர் பாம்பு ஒரு கை சுற்றி வைத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே! |
|
உரை
|
|
|
|
|
840 | ஊரின் நின்றாய், ஒன்றி நின்று; விண்டாரையும் ஒள் அழலால் போரில் நின்றாய்; பொறையால் உயிர்-ஆவி சுமந்து கொண்டு பாரில் நின்றாய்;-பழனத்து அரசே!-பணி செய்பவர்கட்கு ஆர நின்றாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே! |
|
உரை
|
|
|
|
|
841 | போகம் வைத்தாய், புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை; ஆகம் வைத்தாய், மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே பாகம் வைத்தாய்;-பழனத்து அரசே!-உன் பணி அருளால் ஆகம் வைத்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே! |
|
உரை
|
|
|
|
|
842 | அடுத்து இருந்தாய், அரக்கன் முடி வாயொடு தோள் நெரியக் கெடுத்து இருந்தாய்; கிளர்ந்தார் வலியைக் கிளையோடு உடனே- படுத்திருந்தாய்;-பழனத்து அரசே!-புலியின்(ன்) உரி-தோல் உடுத்திருந்தாய்; அடியேனைக் குறிக்கொண்டு அருளுவதே! |
|
உரை
|
|
|
|