தொடக்கம் |
|
|
4.91 திருஐயாறு திருவிருத்தம் |
873 | குறுவித்தவா, குற்றம் நோய் வினை காட்டி! குறுவித்த நோய் உறுவித்தவா! உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி அறிவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே! செறிவித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே! |
|
உரை
|
|
|
|
|
874 | கூர்வித்தவா, குற்றம் நோய்வினை காட்டியும்! கூர் வித்த நோய் ஊர்வித்தவா! உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி ஆர்வித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே! சேர்வித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே! |
|
உரை
|
|
|
|
|
875 | தாக்கினவா, சலம் மேல் வினை காட்டியும்! தண்டித்த நோய் நீக்கினவா! நெடு நீரின் நின்று ஏற நினைந்து அருளி ஆக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே! நோக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே! |
|
உரை
|
|
|
|
|
876 | தருக்கின நான் தகவு இன்றியும் ஓடச் சலம் அதனால் நெருக்கினவா! நெடு நீரின் நின்று ஏற நினைந்து அருளி உருக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே! பெருக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே! |
|
உரை
|
|
|
|
|
877 | இழிவித்த ஆறு, இட்ட நோய் வினைக் காட்டி! இடர்ப்படுத்துக் கழிவித்தவா! கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி அழிவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே! தொழுவித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே! |
|
உரை
|
|
|
|
|
878 | இடைவித்த ஆறு, இட்ட நோய்வினை காட்டி! இடர்ப்படுத்து(வ்) உடைவித்த ஆறு! உற்ற நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி அடைவித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே! தொடர்வித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே! |
|
உரை
|
|
|
|
|
879 | படக்கினவா, பட நின்று பல்-நாளும்! படக்கின நோய் அடக்கின ஆறு! அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம் அடக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே! தொடக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே! |
|
உரை
|
|
|
|
|
880 | மறப்பித்தவா, வல்லை நோய்வினை காட்டி! மறப்பித்த நோய் துறப்பித்தவா! துக்க நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி இறப்பித்த ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே! சிறப்பித்தவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே! |
|
உரை
|
|
|
|
|
881 | துயக்கினவா, துக்க நோய்வினை காட்டி! துயக்கின நோய் இயக்கின ஆறு! இட்ட நோய்வினை தீர்ப்பான் இசைந்து அருளி அயக்கின ஆறு, அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே! மயக்கினவா-தொண்டனேனைத் தன் பொன் அடிக்கீழ் எனையே! |
|
உரை
|
|
|
|
|
882 | கறுத்து மிட்டார், கண்டம்; கங்கை சடை மேல் கரந்து அருள இறுத்து மிட்டார், இலங்கைக்கு இறை தன்னை இருபது தோள் அறுத்து மிட்டார், அடியேனை ஐயாறன் அடிமை(க்)களே; பொறுத்தும் இட்டார்-தொண்டனேனைத் தன் பொன் அடிக் கீழ் எனையே! |
|
உரை
|
|
|
|