தொடக்கம் |
|
|
4.93 திருக்கண்டியூர் திருவிருத்தம் |
903 | வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சித் தானவர் மால் பிரமன்(ன்) அறியாத தகைமையினான், ஆனவன், ஆதிபுராணன், அன்று ஓடிய பன்றி எய்த கானவனை, கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே. |
|
உரை
|
|
|
|
|
904 | வானமதியமும் வாள் அரவும் புனலோடு சடைத் தானம் அது என வைத்து உழல்வான், தழல் போல் உருவன், கானமறி ஒன்று கை உடையான், கண்டியூர் இருந்த ஊனம் இல் வேதம் உடையனை, நாம் அடி உள்குவதே. |
|
உரை
|
|
|
|
|
905 | பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை, உண்டு, அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும்; கண்டம் கறுத்த மிடறு உடையான்; கண்டியூர் இருந்த தொண்டர் பிரானை- கண்டீர்- அண்டவாணர் தொழுகின்றதே. |
|
உரை
|
|
|
|
|
906 | முடியின் முற்றாதது ஒன்று இல்லை, எல்லாம் உடன் தான் உடையான் கொடியும் உற்ற(வ்) விடை ஏறி, ஓர் கூற்று ஒருபால் உடையான்; கடிய முற்று அவ் வினைநோய் களைவான், கண்டியூர் இருந்தான்; அடியும் உற்றார் தொண்டர்; இல்லைகண்டீர், அண்டவானரே. |
|
உரை
|
|
|
|
|
907 | பற்றி ஓர் ஆனை உரித்த பிரான்,பவளத்திரள் போல் முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான், முன்னமே கொடுத்த கல்- தம் குடையவன் தான் அறியான் கண்டியூர் இருந்த குற்றம் இல் வேதம் உடையானை ஆம், அண்டர் கூறுவதே. |
|
உரை
|
|
|
|
|
908 | போர்ப் பனை யானை உரித்த பிரான்; பொறி வாய் அரவம் சேர்ப்பது, வானத் திரை கடல் சூழ் உலகம்(ம்) இதனைக் காப்பது காரணம் ஆக, கொண்டான்; கண்டியூர் இருந்த கூர்ப்பு உடை ஒள்வாள் மழுவனை ஆம், அண்டர் கூறுவதே. |
|
உரை
|
|
|
|
|
909 | அட்டது காலனை; ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம்; அன்று சுட்டது காமனை, கண் அதனாலே; தொடர்ந்து எரியக் கட்டு அவை மூன்றும் எரித்த பிரான்; கண்டியூர் இருந்த குட்டம் முன் வேதப்படையனை ஆம், அண்டர் கூறுவதே. |
|
உரை
|
|
|
|
|
910 | அட்டும் ஒலிநீர், அணி மதியும், மலர் ஆன எல்லாம், இட்டுப் பொதியும் சடைமுடியான், இண்டைமாலை; அம் கைக் கட்டும் அரவு அது தான் உடையான்; கண்டியூர் இருந்த கொட்டும் பறை உடை கூத்தனை ஆம், அண்டர் கூறுவதே. |
|
உரை
|
|
|
|
|
911 | மாய்ந்தன, தீவினை; மங்கின நோய்கள் மறுகி விழத் தேய்ந்தன; பாவம் செறுக்ககில்லா, நம்மை; செற்று அநங்கைக் காய்ந்த பிரான், கண்டியூர் எம்பிரான், அங்கம் ஆறினையும் ஆய்ந்த பிரான், அல்லனோ, அடியேனை ஆட்கொண்டவனே? |
|
உரை
|
|
|
|
|
912 | மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அவ் வாசுகியைத் தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி உண்ட பிரான், நஞ்சு ஒளித்த பிரான், அஞ்சி ஓடி நண்ணக் கண்ட பிரான், அல்லனோ, கண்டியூர் அண்டவானவனே? |
|
உரை
|
|
|
|