தொடக்கம் |
|
|
4.96 திருச்சத்திமுற்றம் திருவிருத்தம் |
933 | கோவாய் முடுகி அடுதிறல் கூற்றம் குமைப்பதன் முன் பூ ஆர் அடிச்சுவடு என்மேல் பொறித்துவை! போக விடில் மூவா முழுப்பழி மூடும்கண்டாய்-முழங்கும் தழல் கைத் தேவா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! |
|
உரை
|
|
|
|
|
934 | காய்ந்தாய், அநங்கன் உடலம் பொடிபட; காலனை முன் பாய்ந்தாய், உயிர் செக; பாதம் பணிவார்தம் பல்பிறவி ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய், அடியேற்கு அருளாய்! உன் அன்பர் சிந்தை சேர்ந்தாய்-திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! |
|
உரை
|
|
|
|
|
935 | பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப, மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி! அத்தா! அடியேன் அடைக்கலம் கண்டாய்-அமரர்கள் தம் சித்தா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! |
|
உரை
|
|
|
|
|
936 | நில்லாக் குரம்பை நிலையாக் கருதி, இந் நீள் நிலத்து ஒன்று அல்லாக் குழி வீழ்ந்து, அயர்வு உறுவேனை வந்து ஆண்டுகொண்டாய்; வில் ஏர் புருவத்து உமையாள் கணவா! விடின் கெடுவேன்- செல்வா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! |
|
உரை
|
|
|
|
|
937 | கரு உற்று இருந்து உன் கழலே நினைந்தேன்; கருப்புவியில்- தெருவில் புகுந்தேன்; திகைத்த(அ)அடியேனைத் திகைப்பு ஒழிவி! உருவில்-திகழும் உமையாள் கணவா! விடின் கெடுவேன்- திருவின் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! |
|
உரை
|
|
|
|
|
938 | வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன் இம்மை உன் தாள் என் தன் நெஞ்சத்து எழுதிவை! ஈங்கு இகழில் அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு ஆர் அறிவார்?- செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! |
|
உரை
|
|
|
|
|
939 | விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால் சுட்டாய்; என் பாசத்தொடர்பு அறுத்து ஆண்டுகொள்!-தும்பி பம்பும் மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் சிட்டா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! |
|
உரை
|
|
|
|
|
940 | இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு, இமையோர் பொறை இரப்ப நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய், நீலகண்டா! புகழ்ந்த அடியேன் தன் புன்மைகள் தீரப் புரிந்து நல்காய்!- திகழ்ந்த திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! |
|
உரை
|
|
|
|
|
941 | தக்கு ஆர்வம் எய்திச் சமண் தவிர்ந்து உன் தன் சரண் புகுந்தேன்; எக் காதல், எப் பயன், உன் திறம் அல்லால் எனக்கு உளதே?- மிக்கார் திலையுள் விருப்பா! மிக வடமேரு என்னும் திக்கா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! |
|
உரை
|
|
|
|
|
942 | பொறித் தேர் அரக்கன் பொருப்பு எடுப்பு உற்றவன் பொன்முடி தோள் இற, தாள் ஒருவிரல் ஊன்றிட்டு, அலற இரங்கி, ஒள்வாள் குறித்தே கொடுத்தாய்; கொடியேன் செய் குற்றக் கொடுவினைநோய் செறுத்தாய்-திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! |
|
உரை
|
|
|
|